உள்ளூர் செய்திகள்
தூத்துக்குடியில் விபத்தில் வாலிபர் பலி
- துரைப்பாண்டி நேற்று இரவு பணி முடிந்து மோட்டார் சைக்கில் வீடு சென்று கொண்டிருந்தார்.
- பலத்த காயம் அடைந்த துரைப்பாண்டியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி சத்யா நகரை சேர்ந்தவர் துரைப்பாண்டி ( வயது 25). கூலித்தொழிலாளி. நேற்று இரவு பணி முடிந்து மோட்டார் சைக்கில் வீடு சென்று கொண்டிருந்தார். தூத்துக்குடி மெயின் ரோட்டில் வந்தபோது திடீரென எதிரே வந்த கார் மீது துரைப்பாண்டியின் மோட்டார் சைக்கிள் மோதியது. பின்னர் சாலையின் தடுப்புசுவரின் மீது மோதி கீழே விழுந்தது.
இதில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக தென்பாகம் இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.