உள்ளூர் செய்திகள் (District)

இறந்து கிடந்த முனீஸ்வரன்.

திண்டுக்கல் அருகே வாலிபர் மர்மச்சாவு

Published On 2022-06-29 07:13 GMT   |   Update On 2022-06-29 07:13 GMT
  • திண்டுக்கல் அருகே ஆடலூர் செல்லும் சாலையில் இன்று காலை தலையில் பலத்த காயங்களுடன் ஒருவர் இறந்து கிடந்தார்.
  • விபத்தில் இறந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம் தர்மத்துப்பட்டியில் இருந்து ஆடலூர் செல்லும் சாலையில் இன்று காலை தலையில் பலத்த காயங்களுடன் ஒருவர் இறந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டி–ருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அப்பகுதி மக்கள் கன்னிவாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்ெகாண்டனர். அவரிடம் இருந்த அடையாள அட்டையை வைத்து சோதனை நடத்தியதில் இறந்தவர் செம்பட்டி அருகில் உள்ள பச்சமலையான் கோட்டையை சேர்ந்த முனீஸ்வரன் (வயது35) என தெரிய வந்தது.

கேபிள் ஆபரேட்டராக பணிபுரிந்து வரும் இவருக்கு 2 திருமணங்கள் நடந்து மனைவியுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்ட நிலையில் தனியாக வசித்து வந்துள்ளார்.

இவர் எதற்காக இங்கே வந்தார்? விபத்தில் இறந்தாரா? அல்லது கொைல செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அவரது உடலை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News