உள்ளூர் செய்திகள் (District)

கோப்பு படம்.

மாமியாரை கத்தியால் குத்திய வாலிபருக்கு வலை

Published On 2023-07-25 06:37 GMT   |   Update On 2023-07-25 06:37 GMT
  • வீட்டில் மாரிமுத்து தகராறு செய்ததை மாமியார் பேசியம்மாள் கண்டித்ததால் ஆத்திரம் அடைந்த மாரிமுத்து மாமியார் என்றும் பாராமல் கத்தியால் சரமாரியாக குத்தினார்
  • பலத்த காயங்களுடன் அவர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்

நிலக்கோட்ைட:

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகில் உள்ள அய்யங்கோ ட்டையை சேர்ந்தவர் செல்லப்பாண்டி. இவரது மகள் பிரியாவுக்கும், நிலக்கோட்ைட பெரியார் நகரை சேர்ந்த மாரிமுத்து (32) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

வீட்டில் மாரிமுத்து தகராறு செய்ததை மாமி யார் பேசியம்மாள் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மாரிமுத்து மாமியார் என்றும் பாராமல் கத்தியால் சரமாரியாக குத்தினார். பலத்த காயங்களுடன் அவர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து நிலக்கோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News