உள்ளூர் செய்திகள்

ஊட்டியில் சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

Published On 2022-12-04 08:29 GMT   |   Update On 2022-12-04 08:29 GMT
  • 14 வயது வடமாநில சிறுமியுடன் வாலிபருக்கு பழக்கம் ஏற்பட்டது
  • போலீசார் ஹரிசை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

ஊட்டி

ஊட்டியைசேர்ந்தவர் ஹரிஷ்(24). இவரது சகோதரி அருகே உள்ள ஒரு பகுதியில் வசித்து வருகிறார். இதனால் ஹரிஷ் அடிக்கடி தனது சகோதரி வீட்டிற்கு சென்று வந்தார். அப்போது அங்கு வசிக்கும் 14 வயது வடமாநில சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. பின்னர் ஆசை வார்த்தை கூறி அவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். சிறுமியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதை உணர்ந்த பெற்றோர் அவரிடம் விசாரித்தனர். அப்போது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து அவர்கள் ஊட்டி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் ஹரிசை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News