உள்ளூர் செய்திகள் (District)

மது குடிப்பதை கண்டித்ததால் வாலிபர் தற்கொலை

Published On 2023-05-02 09:10 GMT   |   Update On 2023-05-02 09:10 GMT
  • கார்த்தி (வயது 35). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.
  • அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததால் கார்த்தியின் தாய் அவரை கண்டித்தார்.

சேலம்:

சேலம் கொண்ட லாம்பட்டி அடுத்த காட்டூர் மாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி (வயது 35). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று அவரது மனைவி பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததால் கார்த்தியின் தாய் அவரை கண்டித்தார். இதனால் மனமுடைந்த கார்த்தி வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

அதனை பார்த்த உறவினர்கள் கதறினர். இந்த சம்பவம் குறித்து கொண்டலாம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து வந்த போலீசார், அவரது உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News