கதம்பம்
null

வாலியின் சாமர்த்தியம்!

Published On 2024-09-06 23:15 GMT   |   Update On 2024-09-06 23:15 GMT
  • வாலி சொன்னார்,"ராமாயணத்திலே,வாலி யாரோடு சேர்கிறானோ, அவருடைய பலத்தில் பாதி, அவனுக்கு வந்து விடுமாம்.
  • அறிஞர் கிண்டலாக ,"அப்படியும் உனக்கு அறிவு வந்ததாகத் தெரியவில்லையே?" என்றார்.

கவிஞர் வாலி ஒரு அறிஞரைப் பார்க்கப் போயிருந்தார். அவர் கேட்டார்,

"வாலி என்று ஏன் பெயர் வைத்திருக்கிறாய்?"

வாலி சொன்னார்,"ராமாயணத்திலே,வாலி யாரோடு சேர்கிறானோ, அவருடைய பலத்தில் பாதி, அவனுக்கு வந்து விடுமாம். அதுபோல அறிஞர்களுடன் பழகும்போது, அவர்களது அறிவில் பாதி எனக்கு வந்து விடுமல்லவா? அதனால் தான் நான் அந்தப் பெயரை தேர்ந்தெடுத்தேன்" என்றார்.

உடனே அறிஞர் கிண்டலாக ,"அப்படியும் உனக்கு அறிவு வந்ததாகத் தெரியவில்லையே?" என்றார்.

வாலி சிரித்துக் கொண்டே,"நான் இன்னும் எந்த அறிவாளியையும் சந்திக்கவில்லையே!" என்றாராம்.

-சந்திரன் வீராசாமி

Tags:    

Similar News