கதம்பம்

நீங்கள் செய்யும் துரோகம்!

Published On 2024-10-17 11:00 GMT   |   Update On 2024-10-17 11:01 GMT
  • அச்சம் கொள்வதும் துரோகம்தான்..
  • அது உங்கள் உயிருக்கு நீங்கள் செய்யும் துரோகம்..!

கோபம் கொள்வதும்

துரோகம்தான்..

கவலைக் கொள்வதும்

துரோகம்தான்..

பெருமைக் கொள்வதும்

துரோகம்தான்..

அச்சம் கொள்வதும்

துரோகம்தான்..

அவ்வப்போது

துக்கம் கொள்வதும்கூட

துரோகம்தான்..

யாருக்கான

துரோகமென்றால்?..

அது உங்கள் உயிருக்கு

நீங்கள் செய்யும் துரோகம்..!

உங்கள் உயிர்மீது

அக்கறை இருக்குமானால்..

உங்கள் உணர்ச்சிகளின்மீது

கவனம் கொண்டிருங்கள்..!

உணர்ச்சிகள் உங்களுக்கு

கட்டுப்படுகிறவரைதான்..

நீங்கள் ஆரோக்கியமாக

இருப்பதாக அர்த்தம்..!

அவை உங்களைக்

கட்டுப்படுத்திக் கொண்டிருந்தால்..

நீங்கள் குணமாக்கப்பட

வேண்டியவர்..!

உள்ளார்ந்த நோய்த்தன்மை

ஆரம்பத்தில் உணர்ச்சிகளின்

வழியாகத்தான் வெளிக்காட்டும்..

அதன் அடுத்த நிலைதான்..

உடல் உபாதைகளாக உணர்வது..!

நோய்

உணர்ச்சிகள் வடிவத்தில்

உள்ளபோதே..

உங்களை நீங்கள்

தற்காத்துக்கொள்ள முடியும்..!

-அன்பு வேல்முருகன்

Tags:    

Similar News