இந்தியா

பார்க்கிங் பிரச்சனை: கிரிக்கெட் பேட், தடியுடன் மோதலில் ஈடுபட்ட பெண்கள்- வீடியோ

Published On 2024-08-28 02:32 GMT   |   Update On 2024-08-28 02:32 GMT
  • ஏற்கனவே பார்க்கிங் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ள நிலையில் நேற்றுமுன்தினம் அது மோதலாக மாறியுள்ளது.
  • சம்பவம் தொடர்பாக இருதரப்பினரை சேர்ந்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் பார்க்கிங் தொடர்பாக 2 குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நொய்டாவின் செக்டார் 72-ல் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கிடையே ஏற்கனவே பார்க்கிங் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ள நிலையில் நேற்றுமுன்தினம் அது மோதலாக மாறியுள்ளது. கிரிக்கெட் பேட் மற்றும், தடியுடன் ஆண்கள், பெண்கள் என இருதரப்பினரும் சரமாரியாக தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தகராறில் ஒரு வாகனம் சேதமானது.

இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இச்சம்பவம் தொடர்பாக செக்டார் 113 காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் இருதரப்பினரை சேர்ந்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Tags:    

Similar News