இந்தியா (National)

ஜம்மு காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்: வீரர்கள் உள்பட 4 பேர் பலி

Published On 2024-10-24 17:26 GMT   |   Update On 2024-10-24 17:26 GMT
  • ராணுவ வாகனத்தைக் குறிவைத்து பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.
  • பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் குல்மார்க் பகுதியில் உள்ள போடாபதேர் பகுதியில் ராணுவ வீரர்கள் ஒரு வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் ராணுவ வாகனத்தைக் குறிவைத்து திடீர் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் 2 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். 2 போர்ட்டர்களும் பலியாகினர். மேலும் சிலர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றன.

பயங்கரவாதிகள் தாக்குதலை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

ஜம்மு காஷ்மீரில் சட்டசபை தேர்தல் நடைபெற்று புதிய ஆட்சி அமைந்துள்ள நிலையில், பயங்கரவாதிகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News