செய்திகள் (Tamil News)

மீண்டும் வாலாட்டும் பாகிஸ்தான் ராணுவம்: எல்லைப் பகுதியில் இன்று அத்துமீறி துப்பாக்கிச் சூடு

Published On 2016-04-10 03:46 GMT   |   Update On 2016-04-10 03:46 GMT
இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் இன்று அதிகாலை அத்துமீறி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்ரீநகர்:

பூஞ்ச் மாவட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் எல்லையோரம் அமைக்கப்பட்டுள்ள இந்திய நிலைகளின்மீது போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் இன்று அதிகாலை பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாகவும், இந்திய வீரர்களும் துப்பாக்கிகளால் சுட்டு எதிர்தாக்குதல் நடத்தி வருவதாகவும் ஜம்முவில் உள்ள ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த ஆண்டில் இதுபோல் பலமுறை இந்தியாவிடம் வாலாட்டிய பாகிஸ்தானுக்கு இந்திய வீரர்கள் சரியான பதிலடி கொடுத்தனர். நமது வீரர்களின் தாக்குதலை சமாளிக்க முடியாத பாகிஸ்தான், ஐ.நா.சபையில் கண்ணை கசக்கியபடி ஒப்பாரி வைத்தது. அதன்பிறகு, சில மாதங்கள் வாலை அடக்கிக் கொண்டிருந்த பாகிஸ்தான், இந்த ஆண்டில் முதன்முறையாக இன்று மீண்டும் தனது சில்மிஷ வேலையை தொடங்கியுள்ளது, குறிப்பிடத்தக்கது.

Similar News