செய்திகள் (Tamil News)
தெலுங்கானாவில் கால்வாய்க்குள் பஸ் கவிழ்ந்த விபத்தில் 10 பேர் பலி
தெலுங்கானா மாநிலம், கம்மம் மாவட்டத்தில் இன்று தனியார் பஸ் கால்வாய்க்குள் கவிழ்ந்து விழுந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர்.
ஐதராபாத்:
தெலுங்கானா மாநிலம், கம்மம் மாவட்டத்தில் இன்று தனியார் பஸ் கால்வாய்க்குள் கவிழ்ந்து விழுந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர்.
காக்கிநாடாவில் இருந்து சுமார் 30 பேருடன் ஐதராபாத் நகரை நோக்கி வந்து கொண்டிருந்த ஒரு தனியார் பஸ், இன்று அதிகாலை கம்மம் மாவட்டத்தில் சாலை பாலத்தில் இருந்து திடீரென்று விலகிச் சென்று பக்கவாட்டிலுள்ள நாகார்ஜுனா சாகர் கால்வாய்க்குள் கவிழ்ந்து விழுந்தது.
இவ்விபத்து தொடர்பான தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் மற்றும் மீட்புப்படையினர் கால்வாய்க்குள் மூச்சுதிணறி உயிரிழந்த பத்து பிணங்களை வெளியே எடுத்தனர். சுமார் 15 பேர் அருகாமையில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தெலுங்கானா மாநிலம், கம்மம் மாவட்டத்தில் இன்று தனியார் பஸ் கால்வாய்க்குள் கவிழ்ந்து விழுந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர்.
காக்கிநாடாவில் இருந்து சுமார் 30 பேருடன் ஐதராபாத் நகரை நோக்கி வந்து கொண்டிருந்த ஒரு தனியார் பஸ், இன்று அதிகாலை கம்மம் மாவட்டத்தில் சாலை பாலத்தில் இருந்து திடீரென்று விலகிச் சென்று பக்கவாட்டிலுள்ள நாகார்ஜுனா சாகர் கால்வாய்க்குள் கவிழ்ந்து விழுந்தது.
இவ்விபத்து தொடர்பான தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் மற்றும் மீட்புப்படையினர் கால்வாய்க்குள் மூச்சுதிணறி உயிரிழந்த பத்து பிணங்களை வெளியே எடுத்தனர். சுமார் 15 பேர் அருகாமையில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.