செய்திகள் (Tamil News)
திருப்பதி மலையில் செம்மரம் கடத்திய 5 பேர் கைது
திருப்பதி மலையில் செம்மரம் கடத்திய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நகரி:
திருப்பதியில் உள்ள காட்டு பகுதியில் செம்மரங்களை வெட்டி கடத்தப்படுவதை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
திருப்பதியில் உள்ள சேஷாசல மலை, பக்ராபேட்டை ஆகிய பகுதிகளில் போலீசார் தனி தனி குழுவாக பிரிந்து சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சம்பா என்ற இடத்தில் ஒரு கும்பல் செம்மரங்களை சுமந்து கொண்டு சென்றது. அவர்களை பின் தொடர்ந்து சென்ற போலீசார் ஒரு இடத்தில் சுற்றி வளைத்தது.
போலீசாரை பார்த்ததும் செம்மரங்களை கீழே போட்டுவிட்டு தப்பி ஓடினர். போலீசார் விரட்டி சென்று 5 பேரை பிடித்தனர். மற்றவர்கள் தப்பி விட்டனர்.
அவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. பெயர் விவரம், எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்று கூறப்படவில்லை.