செய்திகள் (Tamil News)
கோவா: காவலர்களை தாக்கிவிட்டு சிறையில் இருந்து 45 கைதிகள் தப்பிக்க முயற்சி
கோவா மாநிலத்தில் சிறைக்காவலர்களை தாக்கிவிட்டு 45 கைதிகள் தப்பிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பனாஜி:
கோவா மாநிலம் சதா பகுதியில் உள்ள துணை சிறையில் இருந்து கைதிகள் 45 கைதிகள் தப்பிக்க முயன்றுள்ளனர். சிறிய அளவில் சில பிரச்சனைகளை கிளப்பி நேற்று இரவு 11 மணியளவில் சிறை அதிகாரிகளை அவர்கள் தாக்கி உள்ளனர்.
இந்த தாக்குதலில் சிறைக்காவலர் ஒருவரும் கடுமையான காயம் ஏற்பட்டது. அவர் கோவாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சிறையில் உள்ள பொருட்களையும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தி விட்டு கைதிகள் தப்பித்தனர்.
இதனை அறிந்ததும் அருகில் உள்ள காவல் நிலையங்களை சேர்ந்த போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் வாஸ்கோ நகரை முழுவதுமாக சுற்றி வளைத்தனர்.
இதனால் நிலைமை முழுவதுமாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. கலவரத்திற்காக சரியான காரணம் இன்னும் தெரியவில்லை.
கோவா மாநிலம் சதா பகுதியில் உள்ள துணை சிறையில் இருந்து கைதிகள் 45 கைதிகள் தப்பிக்க முயன்றுள்ளனர். சிறிய அளவில் சில பிரச்சனைகளை கிளப்பி நேற்று இரவு 11 மணியளவில் சிறை அதிகாரிகளை அவர்கள் தாக்கி உள்ளனர்.
இந்த தாக்குதலில் சிறைக்காவலர் ஒருவரும் கடுமையான காயம் ஏற்பட்டது. அவர் கோவாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சிறையில் உள்ள பொருட்களையும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தி விட்டு கைதிகள் தப்பித்தனர்.
இதனை அறிந்ததும் அருகில் உள்ள காவல் நிலையங்களை சேர்ந்த போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் வாஸ்கோ நகரை முழுவதுமாக சுற்றி வளைத்தனர்.
இதனால் நிலைமை முழுவதுமாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. கலவரத்திற்காக சரியான காரணம் இன்னும் தெரியவில்லை.