செய்திகள் (Tamil News)
முன்னாள் மத்திய அமைச்சர் இ அகமது மாரடைப்பால் மரணம்
நேற்று நாடாளுமன்ற கூட்டத்தின் போது மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் இ அகமது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
புதுடெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் இ அகமது(78) மாரடைப்பால் மரணமடைந்தார். நேற்று நடந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் போது இருஅவைகளும் கூடியிருந்தது. அதனைத் தொடர்ந்து, இரு அவைகளுக்கும் பொதுவாக பிரணாப் முகர்ஜி உரையாற்றிய போது, இ அகமதுவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
முன்னதாக நேற்று மதியம் சுமார் 2 மணியளவில் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அதிகாலை 2 மணியளவில் உயிரிழந்தார்.
கடந்த மன்மோகன் சிங் அமைச்சரவையில் கேரளாவின் மலப்புரம் மக்களவை தொகுதியில் சார்பில் வெளியுறவுத்துறை மத்திய இணை அமைச்சராக இ அகமது பணியாற்றி வந்தார்.
மேலும் இவர் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவரும் ஆவார்.
முன்னதாக நேற்று மதியம் சுமார் 2 மணியளவில் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அதிகாலை 2 மணியளவில் உயிரிழந்தார்.
கடந்த மன்மோகன் சிங் அமைச்சரவையில் கேரளாவின் மலப்புரம் மக்களவை தொகுதியில் சார்பில் வெளியுறவுத்துறை மத்திய இணை அமைச்சராக இ அகமது பணியாற்றி வந்தார்.
மேலும் இவர் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவரும் ஆவார்.