செய்திகள் (Tamil News)

டெல்லியில் ஐ.ஐ.டி. ஆராய்ச்சி மாணவி தற்கொலை: விடுதி அறையில் தூக்கில் தொங்கினார்

Published On 2017-06-01 10:46 GMT   |   Update On 2017-06-01 10:46 GMT
புதுடெல்லியில் உள்ள ஐ.ஐ.டி. கல்வி மையத்தில் ஆராய்ச்சி படிப்பு படித்து வந்த மாணவி ஒருவர் தனது விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்டார்.
புதுடெல்லி:

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர் மஞ்சுளா தேவக் (வயது 29). இவர் டெல்லி ஐ.ஐ.டி. கல்வி மையத்தில் பிஎச்.டி. இறுதியாண்டு படித்து வந்தார். ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்த அவர், நேற்று இரவு திடீரென தற்கொலை செய்து கொண்டார். அவரது அறைக்கு மற்றொரு மாணவி சென்றபோது, விடுதி அறையில் உள்ள மின்விசியில் பிணமாக தொங்கியது தெரியவந்துள்து.

இதுபற்றி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வந்து மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்துபோன மாணவியின் அறையில் தற்கொலைக் குறிப்பு எதுவும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. எனினும், படிப்பு தொடர்பான மன அழுத்தமே அவரை தற்கொலைக்கு தூண்டியிருக்கலாம் என கூறப்படுகிறது.

மாணவி மஞ்சுளா தேவக்கின் கணவர் மற்றும் மாமனார்- மாமியார் போபாலில் வசிக்கின்றனர். மஞ்சுளா தேவக் இறந்தது குறித்து அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News