செய்திகள் (Tamil News)

தெற்கு ரெயில்வேயின் புதிய பொது மேலாளராக குல்ஷ்ரேஸ்தா நியமனம்

Published On 2017-10-30 22:24 GMT   |   Update On 2017-10-30 22:25 GMT
தெற்கு ரெயில்வேயின் புதிய பொது மேலாளராக ஆர்.கே.குல்ஷ்ரேஸ்தா நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுடெல்லி:  

ரெயில்வே துறையில் 5 பொது மேலாளர்களை நியமித்து மத்திய பணியாளர் நலத்துறை நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில், தெற்கு ரயில்வே பொது மேலாளராக ஆர்.கே.குல்ஷிரேஸ்தா நியமிக்கப்பட்டுள்ளார். டெல்லி மற்றும் ஜம்மு காஷ்மீரின் சில பகுதிகளை உள்ளடக்கிய வடக்கு ரயில்வேயின் பொது மேலாளராக பணியாற்றிய இவர் தற்போது தெற்கு ரயில்வே மண்டலத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

வடக்கு ரெயில்வேயின் பொது மேலாளராக விஸ்வேஷ் சவுபி நியமிக்கப்பட்டுள்ளார். கொல்கத்தா மெட்ரோ ரெயில்வேயின் புதிய பொது மேலாளராக அஜய் விஜய்வீர்கயாவும், வாரணாசி டீசல் லோகோமோடிவ்வின் பொது மேலாளராக ரேஷ்மி கோயலும், கவுகாத்தியின் வடகிழக்கு ரெயில்வே (கட்டுமானம்) பொது மேலாளராக என்.கே.பிரசாத்தும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Similar News