செய்திகள் (Tamil News)

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 100 வயது மூதாட்டி உயிரிழப்பு - வாலிபர் கைது

Published On 2017-10-31 07:23 GMT   |   Update On 2017-10-31 07:23 GMT
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் குடிபோதையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 100 வயது மூதாட்டி மரணமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலம் மீருட் மாவட்டத்தில் 100 வயதான மூதாட்டி வசித்து வந்தார். மிகவும் வயதானதால் அவர் படுக்கையை விட்டு எழுந்திருக்க முடியாத அளவிற்கு  மோசமான நிலையில் இருந்தார்.



இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு அப்பகுதியைச் சேர்ந்த அன்கித் புனியா என்பவர் வீட்டில் தனியாக  மூதாட்டியிடம் குடிபோதையில் தவறாக நடந்து கொள்ள முயன்றுள்ளார். மூதாட்டியின் அழுகுரல் கேட்டு கிராம மக்கள் விரைந்து வந்து பார்த்துள்ளனர். மூதாட்ட்டியை அன்கித்திடமிருந்து காப்பாற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் பாட்டியை சோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

பாட்டியின் உறவினர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் அன்கித்தை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

குடிபோதையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 100 வயது மூதாட்டி மரணமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Similar News