செய்திகள்

எம்.பி. தேர்தல் குறித்து எடியூரப்பா நாளை ஆலோசனை

Published On 2018-05-22 11:26 GMT   |   Update On 2018-05-22 11:26 GMT
பாராளுமன்ற தேர்தல் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் எடியூரப்பா நாளை ஆலோசனை நடத்த இருக்கிறார்.
பெங்களூரு:

முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்த எடியூரப்பா அடுத்த கட்டமாக நாளை (23-ந்தேதி) பாராளுமன்ற தேர்தல் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் மத்திய மந்திரிகள், பா.ஜ.க. முன்னணி தலைவர்கள், எம்.பிக்கள், எம்.எல்.சிக்கள், எம்.எல்.ஏக்கள் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.
Tags:    

Similar News