செய்திகள்

ஓடும் ரெயிலின் முன் செல்பி எடுக்க முயன்ற இரு சிறுவர்கள் பலி - பஞ்சாப்பில் பரிதாபம்

Published On 2018-08-05 14:59 GMT   |   Update On 2018-08-05 14:59 GMT
பஞ்சாப் மாநிலத்தில் ஓடும் ரெயிலின் முன் செல்பி எடுக்க முயன்ற இரு சிறுவர்கள் பரிதாபமாக பலியாகினர். #SelfieinTrain
சண்டிகர் :

பஞ்சாப் மாநிலத்தின் சண்டிகர் - லூதியானா வழித்தடத்தில் கத்னா சாஹிப் ரெயில்வே பாலம் உள்ளது.

இன்று விடுமுறை என்பதால் நண்பர்களுடன் பொழுதை கழிக்க 3 சிறுவர்கள் இந்த ரெயில்வே பாலத்துக்கு வந்தனர். ஏழாம் வகுப்பு படிக்கும் அவர்கள் அந்த வழியாக வந்த ரெயில் முன் செல்பி எடுக்க முயற்சித்தனர்.

அப்போது, ராம்புரா மாவட்டத்தை சேர்ந்த யுவராஜ், கவுரவ் என்ற இரு சிறுவர்கள் ரெயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தனர்.

செல்பி எடுக்க முயன்றபோது ரெயிலில் அடிபட்டு இரு சிறுவர்கள் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News