செய்திகள்

ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை தடுக்க 8 டன் தங்கத்தை விலைக்கு வாங்கிய ரிசர்வ் வங்கி

Published On 2018-09-04 09:19 GMT   |   Update On 2018-09-04 09:22 GMT
ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை தடுக்க 8 டன் தங்கத்தை விலைக்கு வாங்கி இருப்பு வைத்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. #RBI #RupeeAllTimeLow

புதுடெல்லி:

சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.71 ஆக உள்ளது.

இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை எப்போதும் இல்லாத அளவுக்கு ‘கிடு கிடு’ வென உயர்ந்து வருகிறது. தங்கம் விலையும் அதிகரித்துள்ளது. அதைதொடர்ந்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் அபாயம் உள்ளது.

எனவே பணமதிப்பு வீழ்ச்சியை தடுக்க இந்திய ரிசர்வ் வங்கி 2017-2018 நடப்பு ஆண்டில் 8.46 டன் தங்கத்தை விலைக்கு வாங்கி இருப்பு வைத்துள்ளது.

 


ரிசர்வ் வங்கி இது குறித்து சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், ஜூன் 30-ந் தேதி நிலவரப்படி 566.23 டன் தங்கம் இருப்பு உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் இதே கால கட்டத்தில் 557.77 டன் தங்கம் மட்டுமே இருப்பில் இருந்தது.

9 ஆண்டுகளுக்கு பிறகு ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கடந்த 2009-ம் ஆண்டில் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியின் போது சர்வதேச நிதி ஆணையத்திடம் இருந்து 200 டன் தங்கத்தை விலைக்கு வாங்கியது. #RBI #Gold

Tags:    

Similar News