செய்திகள்

இந்த ஆண்டுக்கான ஜி.எஸ்.டி. கணக்கை தாக்கல் செய்யும் தேதி மார்ச் 31 வரை நீட்டிப்பு

Published On 2018-12-10 11:59 GMT   |   Update On 2018-12-10 11:59 GMT
சரக்கு மற்றும் சேவைவரி தொடர்பாக இந்த ஆண்டு தாக்கல் செய்ய வேண்டிய ஜி.எஸ்.டி. கணக்கு அறிக்கைக்கான காலக்கெடு அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. #Duedateextended #GSTreturnstill
புதுடெல்லி:

மத்திய அரசுக்கு சரக்கு மற்றும் சேவைவரி செலுத்தும் நிறுவனங்கள் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 31-ம் தேதிக்குள் ஜி.எஸ்.டி. கணக்கு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.

இந்நிலையில், GSTR-9, GSTR-9A மற்றும் GSTR-9C படிவங்களை (ஃபார்ம்) தாக்கல் செய்யும் காலக்கெடுவை அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதிவரை நீட்டித்து இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



மேற்கண்ட படிவங்கள் ஜி.எஸ்.டி. தொடர்பான பொது இணையவெளியில் விரைவில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Duedateextended #GSTreturnstill 
Tags:    

Similar News