செய்திகள் (Tamil News)
கோப்பு படம்

கேரளாவில் புதிதாக 24 பேருக்கு கொரோனா

Published On 2020-05-21 17:35 GMT   |   Update On 2020-05-21 17:35 GMT
கேரளாவில் இன்றும் புதிதாக 24 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:

கேரளாவில் இன்று புதிதாக 24 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 690 ஆக அதிகரித்துள்ளது. 

மாநிலத்தில் இன்று வைரஸ் உறுதி செய்யப்பட்ட 24 பேரில் 14 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். மேலும், 10 பேர் வெளிமாநிலங்களில் இருந்து கேரளா வந்தவர்கள். 

இதனால் கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருபவர்களின் எண்ணிக்கை 177 ஆக அதிகரித்துள்ளது. 

வைரஸ் பாதிப்பில் இருந்து இன்று 8 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 510 ஆக அதிகரித்துள்ளது.

Similar News