செய்திகள் (Tamil News)
கோப்புப்படம்

கர்நாடகாவில் தினசரி கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது

Published On 2021-05-20 17:56 GMT   |   Update On 2021-05-20 17:56 GMT
கர்நாடகாவில் இன்று 28,869 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 23,35,524 ஆக அதிகரித்துள்ளது.
பெங்களூரு:

கர்நாடகாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், இன்று கர்நாடகாவில் இன்று 28,869 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 23,35,524 ஆக அதிகரித்துள்ளது.  

மேலும் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு மேலும் 548 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23,854 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 52,257 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 17,76,695 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது வரை 5,34,954 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

Similar News