இந்தியா (National)
ராகுல் காந்தி, நிர்மலா சீதாராமன்

பூஜ்ஜிய பட்ஜெட் கருத்து: ராகுல் காந்திக்கு, நிர்மலா சீதாராமன் பதிலடி

Published On 2022-02-02 02:04 GMT   |   Update On 2022-02-02 02:04 GMT
எதையும் யோசிக்காமல் வெறும் கருத்துகளை மட்டும் கூறும் ஒரு தலைவரைக் கொண்டிருக்கும் கட்சிக்காக (காங்கிரஸ்), பரிதாபப்படுவதாக கூறிய நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
புதுடெல்லி :

நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து இருந்தார். மோடி அரசின் பட்ஜெட், பூஜ்ஜிய பட்ஜெட் என அவர் வர்ணித்திருந்தார். ராகுல் காந்தியின் இந்த கருத்து வழக்கமான மேலோட்டமான பதில் என நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுத்து உள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘பழமையான அரசியல் கட்சியின் தலைவரான ராகுல் காந்தி, பட்ஜெட்டில் என்ன கூறப்பட்டுள்ளது என்பதை தயவு செய்து புரிந்து கொள்ள வேண்டுகிறேன்.’ என தெரிவித்தார்.

எதையும் யோசிக்காமல் வெறும் கருத்துகளை மட்டும் கூறும் ஒரு தலைவரைக் கொண்டிருக்கும் கட்சிக்காக (காங்கிரஸ்), பரிதாபப்படுவதாக கூறிய நிர்மலா சீதாராமன், எங்களிடம் கூறும் கருத்துகளை அவர்கள் தங்கள் மாநிலங்களில் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

Similar News