இந்தியா (National)

சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை அதிரடி.. 36 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை

Published On 2024-10-04 15:56 GMT   |   Update On 2024-10-04 15:56 GMT
  • பல பகுதிகளை சேர்ந்த கிராமங்களுக்கு தனிப்படைகள் அனுப்பப்பட்டன.
  • 36 மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தின் நாராயண்பூர்-தன்டேவாடா எல்லைப் பகுதியில் மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, ஓர்ச்சா மற்றும் பர்சூர் காவல் நிலையங்களுக்கு உட்பட்ட கோவல், நெந்தூர், துள்துளி ஆகிய பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு நேற்று தனிப்படைகள் அனுப்பி வைக்கப்பட்டன.

இன்று நண்பகல் நெந்தூர் - துள்துளி அருகே உள்ள காடுகளில் என்கவுன்டர் நடந்தது. தீவிர எச்சரிக்கையுடன், காடுகளுக்குள் பின்வாங்கிய சில மாவோயிஸ்டுகளை பாதுகாப்புப் படையினர் பின்தொடர்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும், இதுவரை நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 36 மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது சமீபத்திய என்கவுண்டர்களில் பாதுகாப்பு படைகளுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகின்றன.

துப்பாக்கிச் சூட்டை தொடர்ந்து ஏ.கே. சீரிஸ் துப்பாக்கிகள் மற்றும் பிற ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் கிளர்ச்சிக்கு எதிரான போராட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக இந்த என்கவுண்டர் அமைந்துள்ளது.

Tags:    

Similar News