இந்தியா
3-வது முறையாக பிரதமர்... எதிர்க்கட்சிகள் விரக்தி: பிரதமர் மோடி
- நேருவுக்கு பிறகு இந்திய வரலாற்றில் பலர் நேரடியாகவும், சிலர் ரிமோட் கண்ட்ரோல் மூலமாகவும் பிரதமர் ஆகி உள்ளனர்.
- தேநீர் வியாபாரி தொடர்ந்து 3-வது முறையாக வெற்றி பெற்றிருப்பதை நினைத்து எதிர்க்கட்சிகள் கவலை அடைந்துள்ளன
பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டம் பாராளுமன்ற வளாகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு பிரதமர் மோடி வந்தபோது அவருக்கு எம்.பி.க்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். எம்.பி.க்கள் அனைவருக்கும் வணக்கம் தெரிவித்தனர்.
இதையடுத்து பிரதமர் மோடி கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* காந்தி குடும்பத்தை சேராத ஒருவர் எப்படி 3-வது முறையாக பிரதமர் ஆனார் என்பதை நினைத்து எதிர்க்கட்சிகள் விரக்தி அடைந்துள்ளன.
* நேருவுக்கு பிறகு இந்திய வரலாற்றில் பலர் நேரடியாகவும், சிலர் ரிமோட் கண்ட்ரோல் மூலமாகவும் பிரதமர் ஆகி உள்ளனர்.
* நேருவுக்கு பிறகு ஒரு தேநீர் வியாபாரி தொடர்ந்து 3-வது முறையாக வெற்றி பெற்றிருப்பதை நினைத்து எதிர்க்கட்சிகள் கவலை அடைந்துள்ளன என்று கூறினார்.