என் மலர்
நீங்கள் தேடியது "NDA"
- பீகாரில் நிதிஷ் குமார் தலைமையிலான 20 வருட என்.டி.ஏ. அரசு, தற்போது மோசமான வாகனமாக மாறிவிட்டது.
- 20 வருடத்திற்கும் மேலாக மோசமான என்.டி.ஏ. அரசை ஏன் மாநிலத்தில் செயல்பட அனுமதிக்க வேண்டும்?.
15 வருட பழைய வாகனங்களை அகற்றுவதை போன்று, 20 வருடத்திற்கும் மேலாக பீகார் மக்களுக்கு சுமையாகி வரும் என்.டி.ஏ. கூட்டணியை அகற்ற வேண்டும் என ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தேஜஸ்வி யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
பீகாரில் நிதிஷ் குமார் தலைமையிலான 20 வருட என்.டி.ஏ. அரசு, தற்போது மோசமான வாகனமாக மாறிவிட்டது. பீகாரில் மக்களுக்கு பாதிப்பை ஏற்படும் வகையில் அதிக அளவில் மாசுவை வெளியிடும் 15 வருடத்திற்கும் அதிகமாக பயன்பாட்டில் இருக்கும் வாகனங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
ஆகையால், 20 வருடத்திற்கும் மேலாக மோசமான என்.டி.ஏ. அரசை ஏன் மாநிலத்தில் செயல்பட அனுமதிக்க வேண்டும்?. இந்த அரசு பீகார் மக்களுக்கு சுமையாகிவிட்டது. இது கட்டாயம் மாற்றப்பட வேண்டும்.
20 வருடத்திற்கு மேலாக நிதிஷ் குமார் தலைமையிலான அரசு மோசமான மாசு என்ற வறுமை, வேலைவாய்ப்புயின்மை, ஊழல், குற்றம், ஊடுருவல் ஆகியவற்றை பரப்பிவிட்டுள்ளது.
இவ்வாறு தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
- முதன்முறையாக 2005-ல் பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றபோது, நான் முதல்வராக வேண்டும் என வாஜ்பாய் விரும்பினார்.
- அப்படி இருக்கும்போது நான் ஏன் பாஜகவுடன் இருக்கக் கூடாது.
பீகார் மாநில முதல்வராக நிதிஷ் குமார் இருந்து வருகிறார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து நிதிஷ் குமார் வெளியேற வாய்ப்புள்ளது. அவருக்காக தனது கதவை திறந்தே வைத்திருப்பேன் என ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாரத் யாதவ் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் என்டிஏ கூட்டணியில் இருந்து விலகும் கருத்தை நிதிஷ் குமார் நிராகரித்துள்ளார்.
இது தொடர்பாக நிதிஷ் குமார் கூறியாதாவது:-
மரியாதைக்குரிய வாஜ்பாய் என்னை மத்திய மந்திரியாக்கினார். அவர் என் மீது அதிக பாசம் காட்டினார். என்னுடைய பரிந்துரைரைக்கு அவரிடம் இருந்து சம்மதம் பெற ஒருபோதும் கடினமான சூழ்நிலையை சந்தித்தது இல்லை.
முதன்றையாக 2005-ல் பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றபோது, நான் முதல்வராக வேண்டும் என வாஜ்பாய் விரும்பினார்.
அப்படி இருக்கும்போது நான் ஏன் பாஜகவுடன் இருக்கக் கூடாது. இரண்டு முறை என் கட்சியில் உள்ளவர்கள் தவறு செய்து விட்டார்கள். அவர்கள் காங்கிரஸ்-ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைக்க வற்புறுத்தினர். இரண்டு முறையும் நான் அதை சரி செய்தேன்.
இவ்வாறு நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
- பீகாரில் நிதிஷ்குமாருடன் பா.ஜ.க. கூட்டணியில் உள்ளது.
- அவர் தேசிய ஜனநாயக கூட்டணியில் நீடிப்பாரா என்ற சந்தேகம் உள்ளது.
மும்பை:
உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சியின் மூத்த தலைவரான சஞ்சய் ராவத் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பீகார் மாநிலத்தில் கூட்டணிக் கட்சியை பா.ஜ.க. முதுகில் குத்தியது.
பீகாரில் நிதிஷ்குமாருடன் பா.ஜ.க. கூட்டணியில் உள்ளது. 10 ஐக்கிய ஜனதா தள கட்சி எம்.பி.க்களை வேட்டையாடும் வேலையை தொடங்கியுள்ளது.
இதனால் நிதிஷ்குமார் கலக்கத்தில் உள்ளார். அவர் தேசிய ஜனநாயக கூட்டணியில் நீடிப்பாரா என்ற சந்தேகம் உள்ளது.
வரும் பீகார் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒரு பகுதியாக ஐக்கிய ஜனதா தளம் கட்சி போட்டியிடுவது சாத்தியமில்லை என தெரிவித்தார்.
பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி 2 ஆண்டு நீடிக்குமா என்பது சந்தேகமே என சில தினங்களுக்கு முன் சஞ்சய் ராவத் கருத்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
- ஆந்திர மாநில சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக கடந்த மே 13ம் தேதி நடந்தது.
- இந்தத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 164 தொகுதிகளில் வென்று ஆட்சியை கைப்பற்றியது.
அமராவதி:
அண்டை மாநிலமான ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்தது.
2024 ஆந்திர மாநில சட்டசபைத் தேர்தலிலும் வெற்றி பெற்று தாமே மீண்டும் ஆட்சி அமைப்போம் என்ற எதிர்பார்ப்பில் இருந்த ஜெகன் மோகனுக்கு அம்மாநில மக்கள் அதிர்ச்சியையே பரிசாக அளித்தனர்.
பாராளுமன்ற தேர்தலுடன் ஆந்திர மாநில சட்டசபைக்கான தேர்தல் ஒரே கட்டமாக கடந்த மே 13ம் தேதி நடந்தது. இந்தத் தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தனித்தே போட்டியிட்டது.
எதிர்க்கட்சியான தேசிய ஜனநாயக கூட்டணியில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, பா.ஜ.க, பவன் கல்யாணின் ஜனசேனா ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து களம் கண்டது. காங்கிரஸ் கட்சி கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்தித்தது.

மொத்தமுள்ள 175 சட்டசபை தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தெலுங்கு தேசம் 135 தொகுதிகளிலும், ஜனசேனா 21 தொகுதிகளிலும், பா.ஜ.க. 8 தொகுதிகளிலும் வென்று அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி மீதமுள்ள 11 தொகுதியில் மட்டுமே வென்றது. காங்கிரஸ் கட்சி ஓர் இடத்தில் கூட வெற்றிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, ஆந்திர மாநில முதல் மந்திரியாக சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு ஆந்திர ஆளுநர் அப்துல் நசீர் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். துணை முதல் மந்திரியாக பவன் கல்யாண் பொறுப்பேற்றார். இந்தப் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ஒய்.எஸ்.ஆர். காஙகிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் இடையே நடந்த காரசாரமான கருத்து மோதல் ஏற்பட்டது.
மீண்டும் முதல் மந்திரியாக இங்கு நுழைவேன் எனக்கூறி அழுதபடி சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தார் சந்திரபாபு நாயுடு.

கடந்த 2014 முதல் 2019 வரை ஆந்திர முதல் மந்திரியாக பதவி வகித்த காலத்தில் மாநில திறன் மேம்பாட்டு நிதியில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரில் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டார்.
இப்படி பல்வேறு அரசியல் காரணங்களால் ஆந்திர மாநில மக்கள் ஜெகன் மோகன் ஆட்சியை ஒதுக்கிவிட்டு, தெலுங்கு தேசத்திற்கு அறுதிப்பெருமான்மை ஆதரவு கொடுத்து ஆட்சி அமைக்க வழிவகை செய்தனர்.
- ஜெகதீப் தன்கரை பதவிநீக்கம் செய்ய நோட்டீஸ் அளிப்பது என இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் முடிவு செய்தனர்.
- காங்கிரஸ், திரிணாமுல், தி.மு.க உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 70-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் கையெழுத்திட்டனர்.
புதுடெல்லி:
துணை ஜனாதிபதியான ஜெகதீப் தன்கர் பாராளுமன்ற மேல்சபையின் தலைவராக இருக்கிறார். அவருக்கும் எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கும் இடையே அவையில் மோதல் ஏற்படுகிறது. ஒருதலைபட்சமாக செயல்படுவதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இதற்கிடையே, ஜெகதீப் தன்கரை பதவிநீக்கம் செய்ய நோட்டீஸ் அளிப்பது என இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் முடிவு செய்துள்ளனர்.
காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க., சமாஜ்வாடி, இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்த 70-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் அதில் கையெழுத்திட்டனர்.
இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெறுமா என்பது சந்தேகம்தான். பாராளுமன்றத்தில் இருக்கும் எம்.பி.க்களில் 50 சதவீதத்துடன் மேலும் ஒரு எம்.பி. ஆதரவு தேவை. அப்படி ஆதரவு இருந்தால்தான் மேல்சபை தலைவரை பதவியில் இருந்து நீக்க முடியும்.
இந்நிலையில், பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு கூறியதாவது:
மாநிலங்களவை தலைவர் வழிகாட்டுதலைப் பின்பற்றாமல் காங்கிரஸ் கட்சியும், அவர்களது கூட்டணியும் தொடர்ந்து தவறாக நடந்துகொண்டன.
துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர்ஜி எளிமையான பின்னணியில் இருந்து வந்தவர். எப்போதும் விவசாயிகள் மற்றும் மக்கள் நலனுக்காக பாடுபட்டவர். நாங்கள் அவரை மதிக்கிறோம். அவர் சபையை வழிநடத்தும் விதத்தில் மகிழ்ச்சி அடைகிறோம்.
தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரும்பான்மை உள்ளது. தலைவர் மீது நாங்கள் அனைவரும் நம்பிக்கை வைத்துள்ளோம் என தெரிவித்தார்.
- ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்த குறைந்த பட்சம் ஆறு மசோதாக்களை திருத்தம் செய்ய வேண்டும்.
- மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவை.
இந்தியாவில் மக்களவை தேர்தலுடன் அனைத்து மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்தி முடித்திட மத்திய அரசு ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை முன்மொழிந்துள்ளது.
இதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா? என ஆராய முன்னாள் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழு அமைத்தது. இந்த குழு ஒரு நாடு ஒரே தேர்தல் நடத்துவது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்தது. இதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கான மசோதாவை இந்த கூட்டத் தொடரிலேயே பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த மசோதா மீது ஒருமித்த கருத்தை உருவாக்க மத்திய அரசு விரும்புகிறது. இந்த மசோதா மீதான விரிவான ஆலோசனைக்காக பராளுமன்ற கூட்டுக்குழுவிற்கு (Joint Parliamentary Committee) அனுப்ப வாய்ப்புள்ளது.
பாராளுமன்ற கூட்டுக்குழுவில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் இருப்பார்கள். அவர்கள் இது தொடர்பாக ஆலோசனை நடத்துவார்கள். இது தொடர்பான மற்ற பிரிதிநிதிகளும் கலந்து கொள்வார்கள். நாட்டின் அனைத்து மாநில சட்டமன்ற சபாநாயகர்களும் அழைக்கப்பட வாய்ப்புள்ளது. அனைத்து பொதுமக்களிடமும் இது தொடர்பாக கருத்துகள் கேட்கப்படும்.
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்த குறைந்த பட்சம் ஆறு மசோதாக்களை திருத்தம் செய்ய வேண்டும். இந்த மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவை.
பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இரு அவைகளிலும் கூட்டணி கட்சிகளுடன் மெஜாரிட்டி உள்ளது. ஆனால் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு உள்ளதா? என்பது கேள்விக்குறியானது.
245 இடங்களை கொண்ட மாநிலங்களவையில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 112 இடங்கள் உள்ளன. எதிர்க்கட்சிகளுக்கு 85 இடங்கள் உள்ளன. அரசுக்கு 164 வாக்குகள் தேவை.
மக்களவையில் 545 இடங்களில் 292 இடங்கள் உள்ளன. மூன்றில் இரண்டு பங்கிற்கு 364 வாக்குகள் தேவை. ஆனால் வாக்கு நடத்தப்படும் வீதம் மாறுபடும். அப்போதைய நிலையில் எவ்வளவு உறுப்பினர்கள் அவைக்குள் இருக்கிறார்களோ அந்த எண்ணிக்கைதான் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
- நான் இந்தியா கூட்டணியை உருவாக்கினேன், ஆனால் அவர்களால் அதை ஒன்றாக வைத்திருக்க முடியவில்லை.
- மேற்கு வங்கத்தில் தங்களால் பாஜகவை தோற்கடிக்க முடிந்தபோது மகாராஷ்டிராவில் ஏன் உங்களால் முடியவில்லை என்று மம்தா கேட்டார்
கடந்த மக்களவை தேர்தலில் பாஜகவின் என்டிஏ கூட்டணியை எதிர்க்க தேசிய கட்சியான காங்கிரசை முன்னிறுத்தி மாநில கட்சிகளை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டது இந்தியா கூட்டணி. திமுக, ஆம் ஆத்மி, திரிணமுல் காங்கிரஸ், ஜேஎம்எம் என மாநிலத்தில் ஆளும் கட்சிகள் பல இதில் அங்கம் வகிக்கின்றன.
தொடங்கப்பட்டதில் இருந்தே பல்வேறு கூட்டணி பிரச்சனைகளும் இருந்து வந்தது. கூட்டணியை ஒன்று சேர்ப்பதில் முக்கிய பங்கு வகித்த பீகார் முதல்வரும் ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார் கடைசி நேரத்தில் என்டிஏ கூட்டணிக்குத் தாவினார்.
மேலும் மேற்கு வங்க ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் முதல்வருமான மம்தா பானர்ஜி இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்தாலும் கூட்டணி விவகாரங்களில் பிடி கொடுக்காமல் தள்ளியே இருந்தார்.
ஆனாலும் மக்களவை தேர்தலில் கணிசமான அளவு வெற்றியைப் பதிவு செய்த இந்தியா கூட்டணி பாஜகவின் தனிப் பெரும்பாண்மை கனவை தகர்த்து கூட்டணி தயவில் ஆட்சி அமைக்கும் நிலையை ஏற்படுத்தியது. இருப்பினும் வெற்றி பெரும் அளவுக்கு இந்தியா கூட்டணி வலிமை பெறவில்லை.
இந்நிலையில் இந்தியா கூட்டணியை விட்டு தள்ளியே இருந்த மம்தா, தற்போது கூட்டணிக்குத் தலைமை தாங்க தயார் என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவில் தனியார் செய்தி ஊடகத்துக்குப் பேட்டி அளித்த மம்தா, நான் இந்தியா கூட்டணியை உருவாக்கினேன், ஆனால் அவர்களால் [எதிர்க்கட்சிகள்] அதை ஒன்றாக வைத்திருக்க முடியவில்லை. நான் என்ன செய்வது? நான் முன்னணிக்குத் தலைமை தாங்கவில்லை.
முன்னணியின் தலைவர்கள் அனைவரும் ஒன்றாக இருப்பதைப் பார்க்க வேண்டும். அவர்கள் என்னைக் கண்டுகொள்வதே இல்லை, ஆனால் நான் அனைத்து தேசிய மற்றும் பிராந்திய கட்சிகளுடனும் சிறந்த உறவைப் பேணுகிறேன் என்று தெரிவித்தார்.
வலுவான பாஜக-விரோத சக்தியாக அவருக்கு அங்கீகாரம் கிடைத்துள்ள நிலையில், நீங்கள் ஏன் இந்த கூட்டணிக்கு பொறுப்பேற்கவில்லை என்று செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த மம்தா, வாய்ப்பு கிடைத்தால் இந்தியா கூட்டணியின் சுமூகமான செயல்பாட்டை உறுதி செய்வேன். நான் மேற்கு வங்கத்திற்கு வெளியே செல்ல விரும்பவில்லை, ஆனால் நான் வங்காளத்தில் இருந்தே கூட்டணியை இயக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.கல்யாண் பானர்ஜி, காங்கிரஸ் மற்றும் பிற இந்தியா கூட்டணி கட்சிகள் தங்கள் ஈகோக்களை ஒதுக்கி வைத்துவிட்டு, மம்தா பானர்ஜியை எதிர்க்கட்சிக் கூட்டணியின் தலைவராக அங்கீகரிக்குமாறு தெரிவித்த நிலையில் தற்போது மம்தாவின் இந்த கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் மகாராஷ்டிர சட்டமான்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சிகள் தோல்வி அடைந்த நிலையில் மேற்கு வங்கத்தில் நடந்த இடைத்தேர்தலில் திரிணாமுல் பெரு வெற்றி பெற்றது. இதை சுட்டிக்காட்டி மேற்கு வங்கத்தில் தங்களால் பாஜகவை தோற்கடிக்க முடிந்தபோது மகாராஷ்டிராவில் ஏன் உங்களால் முடியவில்லை என்று மம்தா கேள்வி எழுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.
- குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என மிசோரம் முதல்வர் லால்துஹோமா வலியுறுத்தியுள்ளார்.
- பாஜகவின் என்டிஏ கூட்டணியில் உள்ள மிசோரம் தேசிய முன்னணி [MNF] கட்சி ராஜினாமா செய்ய வலியுறுத்தியது.
மணிப்பூரில் கடந்த 18 மாதங்களாக நடந்து வரும் வன்முறையை கட்டுப்படுத்த தவறிய பாஜக முதல்வர் பைரன் சிங் பதவி விலக வேண்டும் என்ற குரலை எதிர்க்கட்சிகள் முன்வைக்கின்றன. மணிப்பூரின் வன்முறைக்கு முழு பொறுப்பேற்று பைரன் சிங் தலையாயினாலான பாஜக அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டு அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என மிசோரம் முதல்வர் லால்துஹோமா வலியுறுத்தியுள்ளார்.

மிசோரம் முதல்வர் லால்துஹோமா
இதற்கு மத்தியில் பைரன் சிங் பதவி விலக வேண்டும் என்று மிசோரமில் பாஜகவின் என்டிஏ கூட்டணியில் உள்ள மிசோரம் தேசிய முன்னணி [MNF] கட்சியும் அழைப்பு விடுத்துள்ளது. MNF பொதுச் செயலாளர் VL Krosehnehzova, மாநில அரசாங்கத்தின் தோல்வியால் தற்போதைய நெருக்கடி தீவிரமடைந்துள்ளது. பைரன் சிங் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
அவர் இதை கூறி சில மணிநேரங்களுக்குப் பிறகே MNF கட்சியை தேச விரோத கட்சியாக மணிப்பூர் அரசு அறிவித்துள்ளது. மணிப்பூரின் உள் விவகாரங்களில் MNF தொடர்ந்து தலையிடுவதை ஏற்கமுடியாது.தேச விரோத மியான்மர் அகதிகளுக்கு ஆதரவான பிரச்சாரம் செய்வது மற்றும் மணிப்பூருக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளது MNF.

சட்டவிரோத குடியேற்றம், கடத்தல் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கத்திற்காக அண்டை நாடான மியான்மர் அருகே இந்திய எல்லைகளை வேலி அமைக்கும் இந்திய அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு தடையாக இருக்கும் MNF தேச விரோதக் கட்சியாக அதன் உண்மையான நிறத்தை வெளிப்படுத்தி வருகிறது. என்று மணிப்பூர் அரசு நேற்று இரவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
- ஹெச்.டி. குமாரசாமி மக்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார்.
- அடுத்த மாதம் 13 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் ஹெச்.டி. குமாரசாமி கர்நாடக மாநிலத்தின் சன்னபட்னா தொகுதி எம்.எல்.ஏ.-வாக இருந்தார். அவர் தற்போது மக்களவை எம்.பி.-யாக தேர்வு செய்யப்பட்டு மந்திரியாக உள்ளார்.
இதனால் சன்னபட்டனா தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு, அடுத்த மாதம் 13-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளையுடன் முடிவடைகிறது. முன்னதாக, சன்னபட்னா காங்கிரஸ் வேட்பாளராக பா.ஜ.க.-வில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்த யோகேஷ்வரா நிறுத்தப்பட்டுள்ளார்.
தற்போது இந்த தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக ஹெச்.டி. குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.
#WATCH | Bengaluru, Karnataka: NDA fields JDS State Youth Unit President & Union Minister HD Kumaraswamy's son Nikhil Kumaraswamy in the Channapatna bypoll. pic.twitter.com/Suy8pj2Ad9
— ANI (@ANI) October 24, 2024
- மாநிலங்களவையில் தற்போதைய உறுப்பினர்கள் எண்ணிக்கை 237 ஆகும்.
- மெஜாரிட்டிக்கு 119 தேவை. பாஜக 96 உறுப்பினர்களை கொண்டுள்ளது.
இந்திய பாராளுமன்றத்தின் மாநிலங்களவையில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 245. தற்போது 8 இடங்கள் காலியாக உள்ளன. நான்கு உறுப்பினர்கள் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். நான்கு பேர் நியமன உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட வேண்டும்.
பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள உறுப்பினர் இடங்களுக்கு தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதில் 12 எம்.பி.க்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
பாஜக-வைச் சேர்ந்த 9 பேர் தேர்வு செய்யப்பட்டனர். பாஜக கூட்டணியில் உள்ள அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய லோக் மாஞ்ச் ஆகிய இரண்டு கட்சிகளில் இருந்து தலா ஒரு உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியில் இருந்து ஒரு உறுப்பினரும் தேர்வு செய்யப்பட்டனர்.
தற்போது மாநிலங்களவையில் இருக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 237. மெஜாரிட்டிக்கு 119 தேவை. பாஜக உறுப்பினர்கள் 96 பேர் உள்ளனர். அந்த கூட்டணியில் 112 மாநிலங்களவை எம்.பி.க்கள் உள்ளனர். அத்துடன் 6 நியமனம் எம்.பி.க்கள், ஒரு சுயேட்சை எம்.பி. ஆகியோர் பாஜக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தற்போது இரண்டு கூட்டணி கட்சி எம்.பி.க்கள், நியமன எம்.பி.க்கள், சுயேட்சை எம்.பி.க்கள் என பாஜக கூட்டணிக்கு 119 எம்.பி.களுக்கு மேல் பெற்றுள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு 85 மாநிலங்களை எம்.பி.க்கள் உள்ளனர். தெலுங்கானாவில் இருந்து அபிஷேக் சிங்வி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மாநிலங்களவையில் மெஜாரிட்டி பெற கடந்த 10 வருடங்களாக பாஜக முயற்சி பெற்று வந்த நிலையில் தற்போது கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் தனி மெஜாரிட்டி பிடித்துள்ளது. இதன் மூலம் மசோதாக்களை தடங்கல் இல்லாமல் நிறைவேற்ற முடியும்.
மோடி 2-வது முறையாக பிரதமராக தேர்வு செய்யப்பட்டபோது, பல்வேறு மசோதாக்களுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. அப்போது கூட்டணியில் அல்லாத பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம், ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆகியவற்றின் ஆதரவால் மசோதாக்களை நிறைவேற்றி வந்தது.
- மத்திய அரசு மாற்றான்தாய் மனப்பான்மையுடன் செயல்படுவதில்லை.
- தமிழக முதலமைச்சர் டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதிலும் அரசியல் இருக்கிறது.
கோவை:
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் இன்று கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழ் மாநில காங்கிரஸ் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளது. பிரதமர் மோடி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். நாங்கள் தேர்தலை தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையிலேயே எதிர்கொள்வோம்.
2026-ம் ஆண்டில் வளமான தமிழகத்துக்கு வழி வகுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் நாங்கள் பணியாற்றி வருகிறோம்.
மத்திய அரசு தமிழகத்திற்கு நிதியை ஒதுக்கவில்லை என்று கூறி எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம் செய்வதிலும், தமிழக முதலமைச்சர் டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதிலும் அரசியல் இருக்கிறது.
இந்த கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் பங்கேற்று இருக்க வேண்டும். அவர் இந்த கூட்டத்தில் பங்கேற்காததன் மூலம் தமிழக மக்களுக்கு செய்ய வேண்டிய கடமையை தவறி விட்டார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல துறைகளில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என நம்பி மக்கள் வாக்களித்தனர். ஆனால் முதலமைச்சர் மக்கள் தேவையை நிறைவேற்ற தவறி விட்டார்.
மேற்கு வங்காளம் மற்றும் ஜார்க்கண்ட் முதல் மந்திரிகளுக்கு மத்திய அரசுடன் கருத்து வேறுபாடு கொண்டிருந்தாலும் அவர்கள், இந்த கூட்டத்தில் பங்கேற்று உள்ளனர்.
மத்திய அரசு மாற்றான்தாய் மனப்பான்மையுடன் செயல்படுவதில்லை. எந்தெந்த மாநிலத்திற்கு நிதி தேவையோ அந்தந்த மாநிலத்திற்கு தேவைக்கேற்ப நிதி ஒதுக்குகிறார்கள். தமிழகத்திற்கு நிதி ஒதுக்க வேண்டும் என்பது தமிழ் மாநில காங்கிரஸின் வேண்டுகோள். கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு நாங்கள் முழு ஆதரவு.
- பொது சிவில் சட்டம் தொடர்பான வரைவை பார்க்கும் வரை கருத்து கூற இயலாது.
பீகார், தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள கட்சிகள் நாடு தழுவிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றன. பீகார் மாநிலம் தன்னிச்சையாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் மத்தியில் ஆட்சியை பிடித்தால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் எனத் தெரிவித்திருந்தது. ஆனால் பாஜக-வுக்கு சாதிவாரி கணக்கெடுப்பில் உடன்பாடு இல்லை.
தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக வலியுறுத்தும்போதெல்லாம், மத்திய அரசு அதை செய்ய வேண்டும் என திமுக அரசு வலியுறுத்தி வருகிறது.
இந்த நிலையில் பாஜக கூட்டணியில் உள்ள மத்திய மந்திரி சிராக் பஸ்வான் சாதிவாதி கணக்கெடுப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
நாடு தழுவிய சாதிவாரி கணக்கெடுப்புக்கு எங்கள் கட்சி ஆதரவு தெரிவிக்கிறது. ஆனால், அதன் புள்ளி விவரங்களை பொது வெளியில் தெரிவித்தால் சமூகத்தில் பிளவை ஏற்படுத்த வழிவகுக்கும்.
பாஜக தேர்தல் அறிக்கையில் ஒரே தேர்தல், பொது சிவில் சட்டம் (UCC) ஆகியவை கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை ஏதும் நடத்தவில்லை.
பொது சிவில் சட்டம் தொடர்பான வரைவு இன்னும் வெளியிடப்படவில்லை. அதற்கு முன்னதாக அதுகுறித்து ஒரு முடிவு எடுக்க முடியாது. அதேவேளையில் லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) நாடு முழுவதும் ஒரே தேர்தல், அதாவது ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை முழுமையாக ஆதரிக்கும்.
இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு. நாட்டின் ஒவ்வொரு பிராந்தியங்களின் மொழி, கலாச்சாரம் அல்லது வாழ்க்கை முறை உள்ளிட்ட எல்லாம் மாறுபட்டவை. எல்லோரையும் ஒரே புள்ளியில் எப்படி கொண்டு வர முடியும் என்பதை குறித்து வியக்கிறேன்.
இது இந்து- முஸ்லிம் குறித்து விவாதிக்கப்படுகிறது. ஆனால் இந்துக்களில் பாரம்பரியம், திருமணம் உள்ளிட்டவை நாடுகளில் மாறுபட்டவையாக உள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் பழங்குடியினர் இதில் இருந்து விலக்கு பெறுவார்கள் என நினைக்கிறேன். அதனால் அவர்களை நீங்கள் எப்படி ஒரே குடைக்குள் கொண்டு வர முடியும்?. ஆகவே வரைவு வரும்வரை, இந்த கேள்விக்கு தன்னிடம் பதில் இருப்பதாக நான் நினைக்கவில்லை. இது இந்து- முஸ்லிம் பிரிவினை பற்றியது அல்ல. இது அனைவரையும் ஒன்றிணைப்பது பற்றியது என சிராக் பஸ்வான் தெரிவித்துள்ளார்.