இந்தியா

மனைவியைப் பார்க்க இரவுகளில் வந்த பால்ய காதலன்.. முன் நின்று திருமணம் செய்து வைத்த கணவன்

Published On 2024-08-04 09:28 GMT   |   Update On 2024-08-04 09:29 GMT
  • இரவில் நுழையும்போது ராஜேஷின் பெற்றோர் அவனை பார்த்துவிட்டனர்
  • குஷ்பு வை சந்திக்க சந்தான் பல இரவுகளில் இதுபோல வந்து சென்றது பின்னர் தெரியவந்துள்ளது.

பீகார் மாநிலத்தில் உள்ள ராம்நகர் கிராமத்தில் ராஜேஷ் குமார் [26] என்பவர் தனது மனைவி குஷ்பு [22], 2 வயது மகன் மற்றும் தாய் தந்தையுடன் வாழ்ந்து வந்தார். ஒரு நாள் குஷ்பூவை சந்திக்க அவரது சிறுவயது காதலன் சந்தான் [24] அவர்களது வீட்டுக்குள் நடு இரவில் நுழையும்போது ராஜேஷின் பெற்றோர் அவனை பார்த்துவிட்டனர்.

குஷ்பு வை சந்திக்க சந்தான் பல இரவுகளில் இதுபோல வந்து சென்றது பின்னர் தெரியவந்துள்ளது. இதை அறிந்த ராஜேஷ் குமார் கோபப்படாமல் தனது மனைவியை அவரது பால்ய கால காதலனுக்கே, முன் நின்று திருமணம் செய்து வைத்துள்ளார்.

தற்போது குஷ்பு , சந்தான் வீட்டில் புது வாழவைத் தொடங்கியுள்ளார். இதுகுறித்து ஊடகத்துக்குப் பேட்டியளித்த குஷ்பு தனது காதலை புரிந்துகொண்ட முன்னாள் கணவர் ராஜேஷ் குமாருக்கு தான் நன்றிக்கடன் பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அரிதினும் அரிதான இந்த சம்பவம் ராம் நகர் கிராம மக்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.  

Tags:    

Similar News