இந்தியா (National)

ரூ.35,000 கடனை அடைக்க சகோதரியின் 11 வயது மகளை விற்ற பெண்.. அதிர்ச்சி

Published On 2024-07-13 15:53 GMT   |   Update On 2024-07-13 15:53 GMT
  • பள்ளி விடுமுறையை ஒட்டி தனது மகளை ஆந்திராவின் ஹிந்தூர்பூர் நகரில் வசித்து வரும் சகோதரி வீட்டிற்கு தாய் அனுப்பி வைத்துள்ளார்.
  • குழந்தையை காசு கொடுத்து வங்கியுள்ளதாக பண்ணையார் கூறியுள்ளார்

கர்நாடகாவின் தும்கூரு நகரைச் சேர்ந்த சகோதரியின் 11 வயது மகளை விற்று பெண் ஒருவர் தனது கடனை அடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி விடுமுறையை ஒட்டி தனது மகளை ஆந்திராவின் ஹிந்தூர்பூர் நகரில் வசித்து வரும் சகோதரி வீட்டிற்கு தாய் அனுப்பி வைத்துள்ளார்.

ஆனால் இப்போது மகளை திருப்பி அழைத்துசெல்ல தாய் வந்தபோது அவ்வூர் பண்ணையாரிடம் வாங்கிய தனது ரூ.35,000 கடனை அடைப்பதற்காக சகோதரி தனது குழந்தையை அவரிடம் விற்றுள்ளதை அறிந்து அதிர்ச்சியில் உரைத்தார். அந்த நிலக்கிழார், 11 வயது சிறுமியை வீட்டு வேலைகள் செய்யவைத்து கொடுமைஇப் படுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் குழந்தையின் தாய் வந்து கேட்டும், தான் குழந்தையை காசு கொடுத்து வங்கியுள்ளதாகவும், தனது பணத்தை கொடுத்துவிட்டு குழந்தையை அழைத்துசெல்லும்படி கூறியுள்ளார். இதனால தாய் சென்று போலீசில் புகார் அளிக்கவே, குழந்தையை மீது போலீசார் தாயுடன் அனுப்பி வைத்தனர் இதுதொடர்பாக வழக்கு பதித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Tags:    

Similar News