இந்தியா

6 ஆண்டுகளுக்கு பிறகு ஆன்-லைன் ஆர்டர் வினியோகம்

Published On 2024-06-28 06:31 GMT   |   Update On 2024-06-28 06:31 GMT
  • கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் ஆர்டர் செய்தார்.
  • ஆர்டர் நிலை ‘இன்று வந்து சேர்ந்துவிடும்’ என்று காட்டி உள்ளது.

ஆன்-லைன் தளங்களில் பொருட்களை ஆர்டர் செய்து வினியோகம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் ஆன்-லைன் நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு விரைந்து சேவையை வழங்கி வருகின்றனர்.

ஆனால் மும்பையை சேர்ந்த ஒரு வாலிபர் 6 ஆண்டுகளுக்கு முன்பு ஆர்டர் செய்த பொருள் தற்போது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

மும்பையை சேர்ந்த ஆஹ்சன் கர்பாய் என்ற வாலிபர் பிளிப்கார்டில் ஒரு ஜோடி ஸ்பார்க்ஸ் ஸ்லிப்பர்களை கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் ஆர்டர் செய்தார். ஆனால் அவை உடனடியாக வினியோகம் செய்யப்படவில்லை.

பல ஆண்டுகளாக அவரது ஆர்டர் நிலை 'இன்று வந்து சேர்ந்துவிடும்' என்று காட்டி உள்ளது. ஆனால் அந்த நிலை மட்டும் மாறாமலேயே இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் திடீரென பிளிப்கார்ட் நிறுவனத்தில் இருந்து அவருக்கு கடந்த சில நாட்களுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில், அவர் 6 ஆண்டுகளுக்கு முன்பு ஆர்டர் செய்த ரூ.485 மதிப்புள்ள ஒரு ஜோடி செருப்பு வினியோகத்திற்காக அனுப்பப்பட்டுள்ளதாக கூறி உள்ளனர்.

அதன்படி அவருக்கு அந்த ஆர்டர் வினியோகிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான தனது அனுபவத்தை அவர் எக்ஸ் தளத்தில் தனது ஆர்டரின் வரலாற்றுடன் கூடிய ஸ்கிரீன்ஷாட்டுகளை பகிர்ந்தார்.

அவரது இந்த பதிவு வைரலான நிலையில் பயனர்கள் பலரும் தங்களது அனுபவங்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

Tags:    

Similar News