இந்தியா

ஆபீசில் மதுபோதை.. உடம்புவலிக்கு மசாஜ் - அரசுப் பயிற்சி மைய பிரின்சிபல் ஒய்யாரம் - வைரல் புகைப்படங்கள்

Published On 2024-08-23 07:06 GMT   |   Update On 2024-08-23 08:46 GMT
  • இதற்கு முன்னரும் ஜெய்ஸ்வால் மீது புகார் அளித்திருந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
  • ஆபீஸ் ரூமில் வைத்து மது அருந்துவதும், மாடியில் படுத்து மசாஜ் செய்து கொள்வதுமாக இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

 பீகாரில் பெட்டியா [Bettiah] பகுதியில் இயங்கி வரும் அரசு நர்சிங் GNM டிப்ளமோ படிப்புகளுக்கான பறிச்சி மையத்தின் பிரின்சிபல் ஆபீஸில் மது அருந்தியும் மசாஜ் செய்தும் ஒய்யாரமாக பொழுதைக் கழிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது . பிரின்சிபல் ஜெய்ஸ்வால் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை படம்பிடித்து அங்கு பயின்று வரும் மாணவர்கள் அம்மாநில முதலமைச்சர் அமைச்சர் அலுவலகத்துக்கும் சுகாதார அமைச்சகத்துக்கும் புகார் கடிதத்துடன் அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதற்கு முன்னரும் ஜெய்ஸ்வால் மீது புகார் அளித்திருந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

 

ஆனால் இவை தனது பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் பொருட்டு ஜோடிக்கப்பட்டவை என்று ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். பீகாரில் மதுவிலக்கு அமலில் இருக்கும் நிலையில் அரசு பயிற்சி மையத்தின் தலைவரே ஆபீஸ் ரூமில் வைத்து மது அருந்துவதும், மாடியில் படுத்து மசாஜ் செய்து கொள்வதுமாக இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

Tags:    

Similar News