இந்தியா

அம்பானி வீட்டு கல்யாணம்- ஓட்டல் கட்டணம் ஓர் இரவுக்கு ரூ.1 லட்சம்..

Published On 2024-07-09 04:40 GMT   |   Update On 2024-07-09 04:40 GMT
  • ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணத்தையொட்டி ஓட்டல் அறை வாடகை உயர்ந்துள்ளது.
  • ஜூலை 10 முதல் ஜூலை 14 வரை அறைகள் எதுவும் இல்லை.

இந்தியாவின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானிக்கும், அவரது காதலியும், வைர வியாபாரியின் மகளுமான ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் திருமணம் வருகிற ஜூலை 12-ம் தேதி மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் உள்ள பிரமாண்ட வளாகத்தில் 3 நாட்கள் நடைபெற உள்ளது.

கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாகவே திருமணத்துக்கு முந்தைய சம்பிரதாயங்களும் நிகழ்ச்சிகளும் கோலாகலமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் திருமண நிகழ்ச்சிகள் மற்றும் திருமணத்திற்கு முந்தைய சடங்குகள் அனைத்தும் மும்பையிலேயே நடப்பதால் மும்பையில் ஓட்டல் முன்பதிவுகளிலும் இதன் தாக்கம் காணப்படுகிறது.

 

ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணத்தையொட்டி, மும்பையின் முக்கிய ரியல் எஸ்டேட் மையமான பாந்த்ரா-குர்லா வளாகத்தில் அமைந்துள்ள பெரிய ஓட்டல்களில் முன்பதிவு தீவிரமாக உள்ளது. திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் மும்பையில் உள்ள ஓட்டல்களின் ஆக்கிரமிப்பு மற்றும் விலை அதிகரிப்பை ஏற்படுத்தியுள்ளன.

ஜூலை 14 அன்று ஒரு ஓட்டல் ஒரு இரவுக்கு ரூ. 91,350-க்கு அறைகளை வழங்குவதாக சுற்றுலா மற்றும் ஓட்டல் இணையதளங்கள் தெரிவிக்கின்றன. வழக்கமாக வாடகை ரூ. 13,000 ஆக இருந்தது. ஆனால் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணத்தையொட்டி ஓட்டல் அறை வாடகை உயர்ந்துள்ளது.

விருந்தினர்களுக்கான சரியான தங்குமிடங்கள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், பிகேசி மற்றும் அதைச் சுற்றியுள்ள ஓட்டல் கட்டணங்கள் உயர்ந்துள்ளன.

பிகேசி-ல் அறை கட்டணங்கள் ஒரு இரவுக்கு ரூ. 10,250 மற்றும் ஜூலை 9 அன்று ரூ.16,750 மற்றும் ஜூலை 16 அன்று ரூ. 13,750 ஆக இருப்பதாக பயண முன்பதிவு இணையதளங்கள் வாயிலாகத் தெரியவந்துள்ளது.

ஜூலை 10 முதல் ஜூலை 14 வரை அறைகள் எதுவும் இல்லை. அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன. அனைத்து அறைகளும் இந்த தேதிகளுக்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஓட்டல் இணையதளங்கள் காட்டுகின்றன.

Tags:    

Similar News