இந்தியா (National)

ஆம்ஸ்ட்ராங் கொலை ஒட்டுமொத்த தேசத்தையும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது- ஜே.பி.நட்டா

Published On 2024-07-06 13:01 GMT   |   Update On 2024-07-06 13:01 GMT
  • பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு.
  • ஆம்ஸ்ட்ராங்கை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்களுக்கு இரங்கல்.

தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் கொலை ஒட்டுமொத்த தேசத்தையும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளதாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜே.பி.நட்டா தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் கொலை ஒட்டுமொத்த தேசத்தையும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

சமூகத்தின் விளிம்பு நிலை பிரிவினருக்கு அதிகாரம் அளிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு தலைவரின் வாழ்க்கை மிகக் கொடூரமாக துண்டிக்கப்பட்டுவிட்டது.

ஆம்ஸ்ட்ராங்கை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்களுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

குற்றவாளிகளை விரைவில் தண்டிக்க வேண்டும். 24 மணி நேரமும் அற்ப அரசியலில் ஈடுபடுவதை விடுத்து திமுக- காங்கிரஸ் கொஞ்சம் கருணை காட்டுவது நல்லது.

இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

Tags:    

Similar News