இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் பாஜக தோற்கடிக்கப்படும்: அசோக் கெலாட்

Published On 2024-09-18 04:08 GMT   |   Update On 2024-09-18 04:08 GMT
  • பிரதமர் மோடி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சென்றிருந்தபோது மூன்று குடும்பங்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார்.
  • இவ்வாறு குற்றம்சாட்டியது அவர் ஏற்கனவே தோல்வியை ஒப்புக்கொண்டதை காட்டுகிறது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் காஷ்மீர் பகுதியில் உள்ள 16 தொகுதிகள், ஜம்முவில் உள்ள 8 தொகுதிகள் என மொத்தம் 24 தொகுதிகளில் முதற்கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் வாக்குச் சாவடிகளில் காலையில் இருந்து நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாஜக தோற்கடிக்கப்படும் என ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அசோக் கெலாட் கூறுகையில் "மனநிலை காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக இருக்கிறது. பிரதமர் மோடி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சென்றிருந்தபோது மூன்று குடும்பங்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார். இவ்வாறு குற்றம்சாட்டியது அவர் ஏற்கனவே தோல்வியை ஒப்புக்கொண்டதை காட்டுகிறது. பாஜக ஜம்மு-காஷ்மீரில் தோற்கடிக்கப்படும்.

மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தியை பயங்கரவாதி என பாஜக தலைவர் குறிப்பிட்டுள்ளார். இது மிகவும் துரதிருஷ்டவசமானது. இந்த விசயத்தில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா மவுனம் காத்து வருகின்றனர்" என்றார்.

Tags:    

Similar News