இந்தியா
பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட 600-க்கும் மேற்பட்ட பரிசுப்பொருட்கள் ஏலம்
- ஏலம் விடப்பட்டு கிடைக்கும் நிதியின் ஒருபகுதி ராணுவ வீரர்கள், சுதந்திரபோராட்ட வீரர்களின் நலனுக்காக வழங்கப்படுகிறது.
- பரிசாக கிடைத்த 600-க்கும் மேற்பட்ட கலைப்பொருட்கள் ஏலத்தில் இடம் பெற்றுள்ளன.
புதுடெல்லி:
பிரதமர் மோடிக்கு பரிசாக அளிக்கப்பட்ட பொருட்கள் அவ்வப்போது மின்னணு முறையில் ஏலம் விடப்பட்டு அதன் மூலம் கிடைக்கும் நிதியின் ஒருபகுதி ராணுவ வீரர்கள், சுதந்திரபோராட்ட வீரர்களின் நலனுக்காக வழங்கப்படுகிறது.
நேற்று பிரதமர் மோடியின் 74-வது பிறந்தநாளை முன்னிட்டு, 6-வது முறை ஏலம் விடும் நிகழ்வு தொடங்கியது. இந்த முறை அவருக்கு பரிசாக கிடைத்த 600-க்கும் மேற்பட்ட கலைப்பொருட்கள் ஏலத்தில் இடம் பெற்றுள்ளன. இந்த ஏலம் அடுத்த மாதம் (அக்டோபர்) 2-ந்தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்னணு ஏலத்தில் பங்கேற்க, https://pmmementos.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.