இந்தியா

பெங்களூரு கஃபே குண்டுவெடிப்பு- என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல்

Published On 2024-09-09 12:35 GMT   |   Update On 2024-09-09 12:35 GMT
  • பெங்களூரு என்ஐஏ நீதிமன்றத்தில் 5 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
  • ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்புக்கான சதி வெளிநாட்டில் இருந்து தீட்டப்பட்டுள்ளதாக தகவல்.

கர்நாடகா மாநிலம், பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக, பெங்களூரு என்ஐஏ நீதிமன்றத்தில் 5 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

குற்றப்பத்திரிகையில், மாஸ் முனீர், அப்துல் மதீன் தாஹா, முசாவிர், முஸாமில் ஷெரீப், சோயிப் மிர்சா ஆகியோரின் பெயர்கள் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்புக்கான சதி வெளிநாட்டில் இருந்து தீட்டப்பட்டுள்ளதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குண்டுவெடிப்பை நடத்தியவர் கர்னல் என்ற குறியீட்டு பெயரில் வெளிநாட்டில் இருந்து சதித்திட்டத்தை தீட்டியுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

Tags:    

Similar News