இந்தியா

2024 தேர்தலில் எந்த விலை கொடுத்தாவது பா.ஜனதாவை அகற்ற வேண்டும்: அகிலேஷ் யாதவ்

Published On 2024-01-02 02:21 GMT   |   Update On 2024-01-02 02:21 GMT
  • ஜனநாயகம், அரசியலமைப்பு இல்லாதபோது வாக்குகள் நம்மிடம் இருந்து பறிக்கப்படும்.
  • பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை, ஊழல் ஆகியவற்றைத் தவிர நாடு கடந்த 10 ஆண்டுகளில் எதையும் பெறவில்லை.

உத்தர பிரதேச மாநிலத்தின் சமாஜ்வாடி கட்சியின் தலைவரான அகிலேஷ் யாதவ், ஜனநாயகத்தின் புனிதத்தை அழிக்க பா.ஜனதா சதி செய்கிறது என குற்றம்சாட்டியுள்ளார்.

புத்தாண்டு தினத்தையொட்டி கட்சி தலைமையகத்தில கூடியவர்களுக்கு, இந்த புத்தாண்டு அனைவருக்கும் மகிழ்ச்சி கொடுக்கட்டும் என புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். பின்னர் தொண்டர்களுக்கு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பா.ஜனதா அதிகாரத்திற்கு வருவதை தடுத்து நிறுத்த வேண்டும். அதற்கு பூத் அளவில் அமைப்புகளை வலுப்படுத்த வேண்டும். வாக்குகள் கவனமாக பயன்படுத்தப்பட வேண்டும்.

2024 மக்களவை தேர்தல் ஜனநாயகம் மற்றும் அரசியலைப்பை காப்பாற்றுவதற்கானது. ஜனநாயகம், அரசியலமைப்பு இல்லாதபோது வாக்குகள் நம்மிடம் இருநது பறிக்கப்படும் என்பதால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், தலித், சிறுபான்மையினர் நீதியை பெற முடியாது.

பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை, ஊழல் ஆகியவற்றைத் தவிர நாடு கடந்த 10 ஆண்டுகளில் எதையும் பெறவில்லை. பா.ஜனதா அவர்களின் வாக்குறுதிகளில் ஒன்றை கூட நிறைவேற்றவில்லை. ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு பலவீனம் அடைந்துவிட்டது. 2024 மக்களவை தேர்தலில் எந்த விலை கொடுத்தாவது பா.ஜனதாவை அகற்ற வேண்டும்.

இவ்வாறு அகிலேஷ் யாதவ் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News