இந்தியா (National)

வயநாடு இடைத்தேர்தல்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சத்யன் மோகேரி போட்டி

Published On 2024-10-17 20:03 GMT   |   Update On 2024-10-17 20:03 GMT
  • வயநாடு பாராளுமன்ற தொகுதிக்கு நவம்பர் 13-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது
  • இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நவம்பர் 23-ம் தேதி எண்ணப்படுகின்றன.

புதுடெல்லி:

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ராஜினாமா செய்த வயநாடு பாராளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியையும் அறிவித்தது. அதன்படி அங்கு நவம்பர் 13-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நவம்பர் 23-ம் தேதி எண்ணப்படுகின்றன.

இதையடுத்து வயநாடு நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவித்தார்.

இந்நிலையில், வயநாடு பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரான சத்யன் மோகேரி போட்டியிடுவார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் பினோய் விஸ்வம் அறிவித்துள்ளார்.

பா.ஜ.க. வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News