இந்தியா (National)

திருப்பதி லட்டு கவுண்டர்களில் குவிந்த பக்தர்கள் கூட்டம்

Published On 2024-09-24 06:03 GMT   |   Update On 2024-09-24 06:03 GMT
  • நேற்று கோவில் முழுவதும் புனித நீர் தெளிக்கப்பட்டது.
  • லட்டு மீதான தோஷம் நீங்கியதாக தேவஸ்தானம் அறிவித்தது.

திருப்பதி:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஆட்சியின் போது விலங்குகள் கொழுப்பு கலந்த நெய்யில் லட்டுகள் தயாரிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.

இதனால் ஏழுமலையான் கோவிலில் நேற்று மகா சாந்தியாகம் நடத்தப்பட்டு கோவில் முழுவதும் புனித நீர் தெளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து லட்டு மீதான தோஷம் நீங்கியதாக தேவஸ்தானம் அறிவித்தது.

பக்தர்கள் எந்தவித சந்தேகமும் இல்லாமல் வழக்கம் போல் லட்டு பிரசாதம் வாங்கிச் செல்லலாம் என அறிவித்தனர்.

லட்டு சர்ச்சை பரபரப்பை ஏற்படுத்தினாலும் திருப்பதிக்கு வரும் பக்தர்கள் எந்தவித தயக்கமும் இன்றி லட்டுக்களை வாங்கி செல்கின்றனர். லட்டு கவுண்டர்களில் வழக்கம் போல் பக்தர்கள் வரிசையில் நின்று ஆர்வமுடன் லட்டுளை வாங்கிச் சென்றனர்.


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் குறைந்து காணப்பட்டது. நேற்று முதல் இன்று அதிகாலை வரை 65 ஆயிரத்து 604 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 24,266 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.85 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தது. இதனால் காத்திருப்பு அறைகளில் தங்க வைக்கப்படாமல் பக்தர்கள் நேரடியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக 6 மணி நேரம் வரை காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News