பெண்களுக்கு ரூ.2,500 உதவித்தொகை- டெல்லி அமைச்சரவை ஒப்புதல்
- மகிளா சம்ரிதி யோஜனா திட்டத்திற்கு டெல்லி அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- பெண்களுக்கு உதவித்தொகை வழங்க டெல்லி பட்ஜெட்டில் ரூ.5,100 கோடி ஒதுக்கீடு.
டெல்லி மாநில சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது, பிரதமர் மோடி பாஜக ஆட்சி அமைத்ததும் மார்ச் 8-ந்தேதி பெண்கள் வங்கி கணக்கில் 2500 ரூபாய் வரவு வைக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.
அத்துடன் முதல் அமைச்சரவையில் இதற்கு ஒப்புதல் வழங்கப்படும் எனத் தெரிவித்திருந்தார். ஆனால் முதல் அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்படவில்லை.
மகளிர் தினமான இன்று டெல்லி பெண்கள் தங்களுடைய வங்கிக் கணக்கில் 2500 ரூபாய் செலுத்தப்பட்டதற்கான மெசேஜ் வருகிறதா? என பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என அதிஷி கிண்டல் செய்துள்ளார்.
இந்நிலையில், சர்வதேச மகளிர் தினமான இன்றைய தினத்தில் பெண்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகையாக ரூ.2500 வழங்கும் மகிளா சம்ரிதி யோஜனா திட்டத்திற்கு டெல்லி அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பெண்களுக்கு உதவித்தொகை வழங்க டெல்லி பட்ஜெட்டில் ரூ.5,100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் ரேகா குப்தா தெரிவித்துள்ளார்.