இந்தியா (National)

டெல்லி முதல்வரின் இல்லத்திற்கு சீல்- வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட அதிஷி ?

Published On 2024-10-09 13:23 GMT   |   Update On 2024-10-09 13:29 GMT
  • முதலமைச்சர் இல்லத்தில் டெல்லி முதல்வர் அதிஷி குடியேறி 2 நாட்களே ஆன நிலையில் சீல்.
  • முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இருந்து வெளியேற்றப்பட்டது இதுவே முதல் முறை.

டெல்லி முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும், முதலமைச்சர் அதிஷியை வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு, அவரது உடமைகள் வெளியே வீசப்பட்டதாகவும் ஆம் ஆத்மி பரபரப்பாக புகார் தெரிவித்துள்ளது.

முதலமைச்சர் இல்லத்தில் டெல்லி முதல்வர் அதிஷி குடியேறி 2 நாட்களே ஆன நிலையில், பொதுப்பணித்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

துணை நிலை ஆளுநரின் உத்தரவின் பேரில் தனது வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக முதலலமைச்சர் அதிஷி குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் பாஜக அழுத்தத்திற்கு பணிந்து டெல்லி துணை நிலை ஆளுநர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஆம் ஆத்மி குற்றம்சாட்டியுள்ளது.

முதலமைச்சராக உள்ள ஒருவர் முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இருந்து வெளியேற்றப்பட்டது இதுவே முதல் முறை என்று முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News