இந்தியா (National)

மதுபான கொள்கை வழக்கு: மணீஷ் சிசோடியா நீதிமன்ற காவல் ஜூலை 15 வரை நீட்டிப்பு

Published On 2024-07-06 09:45 GMT   |   Update On 2024-07-06 09:45 GMT
  • மணீஷ் சிசோடியாவை கடந்த ஆண்டு பிப்ரவரி 26-ம் தேதி சி.பி.ஐ. கைது செய்தது.
  • இடைக்கால ஜாமின் கோரி மணீஷ் சிசோடியா தாக்கல் செய்த மனு தள்ளுபடி ஆனது.

புதுடெல்லி:

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், டெல்லி முன்னாள் துணை முதல் மந்திரியுமான மணீஷ் சிசோடியாவை கடந்த ஆண்டு பிப்ரவரி 26-ம் தேதி சி.பி.ஐ. கைது செய்தது. மேலும், அவர்மீது அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்துள்ளது.

இதையடுத்து மணீஷ் சிசோடியா டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே, பாராளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் பிரசாரம் மேற்கொள்ள இடைக்கால ஜாமின் கோரி மணீஷ் சிசோடியா டெல்லி கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு மீது விசாரணை நடந்து வந்தது. டெல்லி உயர் நீதிமன்றம் மணீஷ் சிசோடியாவின் இடைக்கால ஜாமின் மனுவை நிராகரித்து கடந்த 20-ம் தேதி உத்தரவிட்டது.

இதற்கிடையே, இந்த வழக்கு விசாரணை தொடர்பாக மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைந்தது.

இந்நிலையில், இன்று ரோஸ் அவென்யு கோர்ட்டில் சி.பி.ஐ. அவரை நேரில் ஆஜர்படுத்தியது. அப்போது வழக்கு விசாரணைக்கு கூடுதல் அவகாசம் வழங்கவேண்டும் என சி.பி.ஐ. தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கோர்ட், பணமோசடி வழக்கில் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவலை வரும் 15-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.

Tags:    

Similar News