இந்தியா (National)

டெல்லியில் ரூ.2,000 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

Published On 2024-10-10 16:16 GMT   |   Update On 2024-10-10 16:16 GMT
  • டெல்லியில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ரூ.7,500 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்
  • கொக்கைன் கடத்தி வந்த வந்ததாக குற்றம் சாட்டப்பட்ட நபர் லண்டனுக்கு தப்பிச் சென்றுவிட்டார்.

டெல்லி ரமேஷ் நகர் பகுதியில் அமைந்துள்ள கிடங்கில் இருந்து ரூ.2000 கோடி மதிப்புள்ள சுமார் 200 கிலோகிராம் கொக்கைன் போதைப்பொருட்களை டெல்லி சிறப்புப் பிரிவு போலீஸ் இன்று பறிமுதல் செய்தனர்.

கொக்கைன் கடத்த பயன்படுத்தப்பட்ட காரில் ஜிபிஎஸ் பொருத்தி கண்காணித்து போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள் சிற்றுண்டி பாக்கெட்டுகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர் .

டெல்லிக்கு கொக்கைன் கடத்தி வந்ததாக குற்றம் சாட்டப்பட்ட நபர் லண்டனுக்கு தப்பிச் சென்றுவிட்டார் என்று சொல்லப்படுகிறது.

அக்டோபர் 2 ஆம் தேதி தெற்கு டெல்லியில் உள்ள மஹிபால்பூரில் உள்ள ஒரு குடோனில் இருந்து 5,620 கோடி ரூபாய் மதிப்பிலான 560 கிலோ கோகைன் மற்றும் 40 கிலோ ஹைட்ரோபோனிக் மரிஜுவானா பறிமுதல் செய்யப்பட்டது.

துஷார் கோயல் (40), ஹிமான்சு குமார் (27), அவுரங்கசீப் சித்திக் (23), பரத் குமார் ஜெயின் (48) ஆகிய நான்கு பேர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டனர், மேலும் 3 பேர் அமிர்தசரஸ், சென்னை மற்றும் உத்தரபிரதேச மாநிலம் ஹாபூரில் இருந்து கைது செய்யப்பட்டனர்.

5,620 கோடி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த துபாய் தொழிலதிபர் வீரேந்தர் பசோயாவுக்கு எதிராக டெல்லி காவல்துறை லுக்அவுட் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது.

டெல்லியில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ரூ.7,500 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது

Tags:    

Similar News