இந்தியா

கெஜ்ரிவால் மேல்முறையீடு மனு: சிபிஐ பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

Published On 2024-07-02 09:59 GMT   |   Update On 2024-07-02 09:59 GMT
  • கெஜ்ரிவாலை ஏற்கனவே அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
  • சி.பி.ஐ கைது மற்றும் நீதிமன்ற காவலுக்கு எதிராக ஐகோர்ட்டில் மேல்முறையீடு.

புதுடெல்லி:

டெல்லியில் மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக டெல்லி முதல் மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை சி.பி.ஐ சமீபத்தில் கைதுசெய்தது.

இதற்கிடையே, சி.பி.ஐ கைது மற்றும் நீதிமன்ற காவலுக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்நிலையில், இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதிகள், கெஜ்ரிவால் மனு குறித்து 7 நாளில் பதிலளிக்க சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டதுடன், விசாரணையை ஜூலை1 7-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

இவ்வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை ஏற்கனவே கைதுசெய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News