இந்தியா (National)

சுதந்திரம் கிடைத்த பின் காங்கிரஸ் கட்சியை கலைக்க விரும்பினார் காந்தி - சொல்கிறார் பாஜக தலைவர் நட்டா

Published On 2024-10-07 02:56 GMT   |   Update On 2024-10-07 02:56 GMT
  • சுதந்திரப் போராட்ட சமயத்தில் உருவானது காங்கிரஸ் கட்சி.
  • ராகுல் காந்தி நாட்டை பிளவுபடுத்த நினைப்பவர்களின் மொழியில் பேசி வருகிறார்.

இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பின்னர் காங்கிரஸ் கட்சியை கலைக்க வேண்டும் என்று மகாத்மா காந்தி கூறியதாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பேசியுள்ளார்.

இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் சிர்மௌர்[Sirmaur] மாவட்டத்தில் நடந்த பேரணியில் பேசிய நட்டா, சுதந்திரப் போராட்ட சமயத்தில் உருவானது காங்கிரஸ் கட்சி. எனவே சுதந்திரம் கிடைத்த பின்னர் இனியும் அதற்கான தேவை இல்லாத காரணத்தால் காங்கிரஸ் கட்சியை கலைக்க வேண்டும் என்றே காந்தி விரும்பினார்.

 

ஆனால் அதிகாரத்தைக் கைப்பற்றும் ஆசையினால் கட்சியை இடது பக்கத்தில் இருன்டயது வலது பக்கமாகவும், வலம் இருந்து இடமாகவும் அவர்கள் நகர்த்திக்கொண்டுள்ளனர்.

இப்போதெல்லாம் ராகுல் காந்தி நகர்ப்புற [urban] நக்சல் மொழியிலிருந்து முன்னேறி நாட்டை பிளவுபடுத்த நினைப்பவர்களின்  மொழியில் பேசி வருகிறார் என்று சாடியுள்ளார். 1885 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட காங்கிரஸ் சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றியது குறிப்பிடத்தக்கது

Tags:    

Similar News