இந்தியா

வயநாடு நிலச்சரிவில் சிக்கிய அரசு பேருந்து- 6 நாட்களுக்கு பிறகு மீட்பு

Published On 2024-08-04 11:38 GMT   |   Update On 2024-08-04 11:38 GMT
  • நிலச்சரிவில் சிக்கி இதுவரை 360-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
  • ராணுவம் அமைத்த பெய்லி பாலம் வழியாக பேருந்து எடுத்துச் செல்லப்பட்டது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து பெய்த கனமழையால், நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், வயநாடு மாவட்டத்தில் முண்டகையில் பயங்கர நிலச்சரிவும், காட்டாற்று வெள்ளமும் ஏற்பட்டது.

இதனால், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 360-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இன்னும் பலர் சிக்கி உள்ளதால் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த இயற்கை பேரிடர் இந்தியா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் சூரல் மலையில் சிக்கிய அரசுப் பேருந்து 6 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டுள்ளது.

அங்கிருந்து மீட்கப்பட்ட நிலையில், ராணுவம் அமைத்த பெய்லி பாலம் வழியாக பேருந்து எடுத்துச் செல்லப்பட்டது.

சூரல் மலை முதல் கல்பட்ட பகுதி வரை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையில் தினசரி பேருந்து இயக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், சூரல் மலையில் நிலச்சரிவுக்கு முன்னதாக பேருந்து இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டிருந்தது. அதன்பிறகு, நிலச்சரிவு ஏற்பட்டதால் பேருந்து இயக்க முடியாத சூழல் நிலவி வருகிறது. 

இந்த சூழ்நிலையில், 6 நாட்களுக்கு பிறகு பேருந்து மீட்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News