இந்தியா (National)

அரியானா சட்டசபை தேர்தல்- வாக்குப்பதிவு நிறைவு

Published On 2024-10-05 13:21 GMT   |   Update On 2024-10-05 13:21 GMT
  • தேர்தலில், 2 முறை ஆட்சியை பிடித்துள்ள பா.ஜ.க. 3-வது முறையாக வெற்றி பெறும் முனைப்புடன் உள்ளது.
  • தேர்தலில் பதிவான வாக்குகள் 8ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

அரியானாவில் 90 சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.

அரியானா சட்டசபை தேர்தலில், பா.ஜ.க., காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன. லோக்தளம்-பகுஜன் சமாஜ் கட்சி, ஜனநாயக ஜனதா கட்சி-ஆசாத் சமாஜ் கட்சி ஆகியவை கூட்டணியாக போட்டியிடுகின்றன. இந்த தேர்தலில், 2 முறை ஆட்சியை பிடித்துள்ள பா.ஜ.க. 3-வது முறையாக வெற்றி பெறும் முனைப்புடன் உள்ளது.

இந்த தேர்தலில் முதல்வர் நயாப் சிங் சைனி, முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா, வினேஷ் புாகத், ஜேபிபி தலைவர் துஷ்யந்த் சவுதாலா உள்ளிட்ட 1027 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

மக்கள் வாக்களிப்பதற்கு வசதியாக 20,632 வாக்கு மையங்கள் அமைக்கப்பட்டன.

காலை 7 மணி வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நிறைவுப்பெற்றன. தேர்தலில் பதிவான வாக்குகள் 8ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News