இந்தியா (National)

குதிரையில் சென்று வாக்களித்த நவீன் ஜிண்டால்

Published On 2024-10-05 06:59 GMT   |   Update On 2024-10-05 06:59 GMT
  • பா.ஜ.க.-வுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என நான் நம்புகிறேன்.
  • நயாப் சிங் சைனி மீண்டும் முதலமைச்சர் ஆவார்.

அரியானாவில் 90 தொகுதிகளுக்கான ஒரே கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள், தலைவர்கள், பிரபலங்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

பா.ஜ.க. எம்.பி.யும், தொழில் அதிபரான நவீன் ஜிண்டால் தனது வாக்கை செலுத்துவதற்காக குதிரையில் வந்தார்.

வாக்களித்த பின்னர் நவீன் ஜிண்டால் கூறியதாவது:-

மக்களிடையே அதிக அளவில் உற்சாகம் நிலவுகிறது. அவர்கள் தங்களது வாக்குகளை இன்று செலுத்தியுள்ளனர். மக்கள் பா.ஜ.க.-வுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என நான் நம்புகிறேன். அரியானாவின் ஆசிர்வாதம் பா.ஜ.க.வுக்கு கிடைக்கும். நயாப் சிங் சைனி மீண்டும் முதலமைச்சர் ஆவார்.

நான் வாக்களிக்க குதிரையில் வந்துள்ளேன். இதை மங்களகரமானதாக கருதுகிறேன். என்னுடைய தாயார் சாவித்ரி ஜிண்டால் ஹிசார் தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் ஹிசார் தொகுதிக்கு அதிக அளவில் பணி செய்ய விரும்புகிறார். ஆகவே, மக்கள் விரும்பும் பிரதிநிதி யார் என்பதை அவர்கள் முடிவு செய்வார்கள்.

இவ்வாறு ஜிண்டால் தெரிவித்தார்.

Tags:    

Similar News