இந்தியா (National)

மோடி மட்டும் இதை செய்துவிட்டால் நானே பாஜகவுக்கு பிரசாரம் செய்கிறேன்.. கெஜ்ரிவால் சவால்!

Published On 2024-10-06 12:59 GMT   |   Update On 2024-10-06 12:59 GMT
  • இரட்டை இன்ஜின் மாடல் என்பது பாஜகவின் இரட்டை கொள்ளை மற்றும் இரட்டை ஊழல் என்பதையே குறிக்கிறது.
  • டெல்லியில் ஆம் ஆத்மி அரசின்கீழ் வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மிசாரம் வழங்கப்படுகிறது.

டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்குள் தான் கூறுவதை மோடி செய்தால் பாஜகவுக்காகத் தான் பிரச்சாரம் செய்யவும் தயார் என்று ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடத்த ஜனதா கி அதாலத் நிகழ்ச்சியில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் அரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் தேர்தலில் காங்கிரஸ் வெல்லும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புக்களைச் சுட்டிக்காட்டி, பாஜகவின் இரட்டை இன்ஜின் அரசுகள் செயலிழந்து வருவதாக விமர்சித்தார்.

 

இரட்டை இன்ஜின் மாடல் என்பது பாஜகவின் இரட்டை கொள்ளை மற்றும் இரட்டை ஊழல் என்பதையே குறிக்கிறது. பிரதமர் மோடிக்கு நான் சவால் விடுகிறேன். அடுத்த பிப்ரவரியில் வர உள்ள டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக பாஜக ஆளும் 22 மாநிலங்களில் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்.

இதைமட்டும் மோடி செய்துவிட்டால் நான் பாஜகவுக்காகப் பிரசாரம் செய்கிறேன் என்று சவால் விடுத்துள்ளார். மேலும் டெல்லியில் பேருந்துகளில் மக்கள் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட பஸ் மார்ஷல்களை நீக்கியது, டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர்களை நீக்கயது, ஊர்க்காவல் படையினரின் ஊதியத்தை நிறுத்தி வைத்துள்ளது உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டி, பாஜக ஏழை மக்களுக்கு எதிரான கட்சி என்று விமர்சனம் செய்துள்ளார். டெல்லியில் ஆம் ஆத்மி அரசின்கீழ் வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மிசாரம் வழங்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News