இந்தியா (National)

மத்திய பட்ஜெட்டை கண்டித்து இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் நாளை போராட்டம்

Published On 2024-07-23 13:59 GMT   |   Update On 2024-07-23 13:59 GMT
  • இது மோடி அரசை காப்பாற்றுவதற்கான பட்ஜெட் என காங்கிரஸ் தலைவர் கார்கே குறிப்பிட்டுள்ளார்.
  • நாற்காலியை காப்பாற்றிக் கொள்வதற்கான பட்ஜெட்டாகவே அமைந்துள்ளது என்றார் ராகுல் காந்தி.

புதுடெல்லி:

பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். காலை 11 மணிக்கு சபை கூடியதும் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார்.

இந்த பட்ஜெட் நாற்காலியை காப்பாற்றிக் கொள்வதற்கான பட்ஜெட்டாகவே அமைந்துள்ளது. கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களை திருப்திப்படுத்தும் விதமாகவே பட்ஜெட் உள்ளது என காங்கிரஸ் எம்.பி.யான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் கார்கே வெளியிட்டுள்ள அறிக்கையில், இது மோடி அரசை காப்பாற்றுவதற்கான பட்ஜெட், வேறு ஒன்றும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், மத்திய பட்ஜெட் குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டில் இந்தியா கூட்டணி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

இதில், மத்திய பட்ஜெட் பாரபட்சமாக போடப்பட்டுள்ளது என்பதைக் கண்டித்து பாராளுமன்றத்தில் நாளை இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News